Saturday, October 17, 2009

medicine for tamils

எங்கள் நாட்டில்
எல்லா திசைகளில் இருந்தும்
கடல், அலைகளை
அள்ளி வருகிறது-ஆனால்
தென் திசை கடல்
மட்டும் அகதிகளை
அள்ளி வருகிறது.
பஞ்சாபிலிருந்து வந்தால்
"பஞ்சாபி"
ராஜஸ்தானிலிருந்து வந்தால்
"ராஜஸ்தானி"
கேரளத்திலிருந்து வந்தால்
"மலையாளி"
பாகிஸ்தானில் இருந்து வந்தால் கூட
அவன் "பாகிஸ்தானி"
ஈழத்திலிருந்து வந்தால் மட்டும்
ஏனடா "அகதி" .
தமிழா திருந்து!
தமிழ் ஈழம் மட்டுமே
இந்த வலிகளுக்கெல்லாம்
மருந்து!!!!!

No comments:

Post a Comment