Saturday, October 17, 2009

annai sonia !!!

மக்களைக் கொன்ற மகராசி (சோனியா)

கருவறைக் குள்ளும்
ஆயுதம் இறக்கி
கருவறுக்கும்…
குரூரத்தின் அடையாளமே!
ஒரு,
பெண்ணுக்குள்ளே
இத்தனை வன்மையா…
என்றென்னும் அவமானமே!!

இந்திய பெண்னென்றால்
இளகும் மனசு.
இத்தாலிய பெண்னுனக்கு
இறுகிய மனசு.

பிள்ளைகளை கொன்ற
முரண் “அன்னை” நீ!

எங்கள் குழந்தைகளுக்கு
ஒப்பாரி பாடவைத்த
ஒப்பற்ற “தாய்” நீ!

குழந்தை இரத்தத்தை
பாலாடையில் நிரப்பிய
பாச “அம்மா” நீ!

ஈழ மக்களின் வாழ்வை
இருட்டாக்கிய…
இந்திய இறக்கு “மதி” யே!

தூளிகளுக்கு பதில்
பாடைக் கட்டிய
புண்ணிய”வதி” யே!!

எங்கள் காந்தி
ஏந்தியது அகிம்சையை!
இத்தாலிய காந்தி நீ
ஏந்துவது ஆயுதத்தை!!

மக்களை கொன்ற மகராசியே,
உன்…
கொடூரத்தின்
கொள்ளளவு என்ன?
கொல்லளவு என்ன?

No comments:

Post a Comment