Tuesday, December 8, 2009

sri lanka election 2009 -kai.arivazhagan

இலங்கையின் அதிபரைத் தேர்வு செய்யும் தேர்தல், வருகிற ஜனவரி மாதத்தில் என்று அறிவிப்பு வெளிவருவதற்கு முன்னரே தேர்தல் வேலைகள் துவங்கிக் களை கட்டிவிட்டது, இலங்கையில் தமிழர்களைத் திறம்படவும், பேரினவாத வெறியோடும் கொன்று குவித்தது ராஜபக்சா குடும்பத்தினரா? அல்லது பொன்சேகா குழுவினரா? என்று முன்கூட்டியே அறிந்து கொள்வதில் தான் சிங்கள மக்களுக்கு இத்தனை ஆர்வம்!!! இன்னும் ஏறத்தாழ இரண்டு ஆண்டு காலம் வரையில் ஆட்சி புரியும் காலநீட்சி இருந்தும், சிறப்புச் சட்டம் இயற்றி வலிந்து பாராளுமன்றத்தைக் கலைத்துத் தேர்தலை எதிர்கொள்ள இலங்கையின் மக்களும் அரசியல்வாதிகளும் ஆயத்தமாகி விட்டனர், இப்படியான ஒரு தேர்தலை எதிர்கொள்ள இலங்கையின் பொருளாதார நிலை ஆயத்தமாக இருக்கிறதோ இல்லையோ?, சிங்களப் பேரினம் எந்தக் கேள்விகளும் இன்றித் தேர்தல் திருவிழாவை வழக்கத்தை விடவும் சிறப்பாகக் கொண்டாடி மகிழ ஆயத்தமாகி விட்டது.

இலங்கை எப்பொழுதுமே ஒரு அமைதியற்ற கலவரத் தீவாகவே இருக்க வேண்டும் என்று மண்டல வல்லரசுக் கனவு காணுகிற இந்தியாவும், பெளத்த-மதம் சார்ந்த நெருக்கம் காட்டும் சீனத்தின் இடையிலான ஆளுமைப் போட்டி ஒருபுறமாகவும், மேற்குலக முதலாளி அமெரிக்கா முன்னிலை வகிக்க, மேலும் பல வல்லாதிக்கங்கள், இலங்கை அரசியலில் முடிந்த வரை அறுவடை செய்யக் காத்துக் கிடக்கின்றன. பல்வேறு அரசியல் புறக்காரணிகளின் நடுவமாய் இலங்கை இருப்பதைக் கண்டு உண்மையிலேயே வருத்தப்படுகிற எந்த அரசியல்வாதியும் இல்லாமல் போனது தான் இலங்கை மக்கள் பெற்ற சாபம்.

“தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்திற்கு முற்றுப் புள்ளி வைத்து விட்டோம்” என்று சிங்களப் பேரினம் கொக்கரித்தாலும், அந்த முற்றுப் புள்ளி இலங்கையின் எதிர்கால அரசியல் முழுவதையும் ஆட்கொள்ளப் போகிற பெருந்தீயின் சிறுதுளி என்பதைக் காலம் தனக்குள் புதைத்துக் கொண்டு காத்திருக்கிறது, காலம் அனுமதிக்கும் வரையில் உண்டு கொழிப்பது, இல்லையா? இருக்கவே இருக்கிறது அமெரிக்கக் குடியுரிமை என்றுதான் இலங்கையின் ஆளும் வர்க்கம் “சந்திரிகா” தொடங்கிக் “கோத்தபாய”, “பொன்சேகா” என்று தனது பட்டியலை விரிக்கிறது.


இப்படி ஒரு இக்கட்டான சூழலில் இந்தத் தேர்தல் தமிழ் மக்களின் விடுதலைக்கும், மேன்மையான வாழ்விற்கும் எந்த விதத்தில் உதவப் போகிறது? இந்தக் கேள்விக்கான விடையைத் தேடி நாம் பயணிப்பதற்கு முன்னால், போட்டியிடும் வேட்பாளர்கள் குறித்து அறிந்து கொண்டு விடுவது நல்லது.

ஒருபுறம் ஆளும் “ஐக்கிய மக்கள் விடுதலை முன்னணி”யின் வேட்பாளர் தற்போதைய அதிபர் “மகிந்த ராஜபக்ஷே”, இன்னொருபுறம் “ஐக்கிய தேசியக் கட்சி”யும், “ஜனதா விமுக்தி பெரமுனா”வும் இணைந்து களமிறக்கி இருக்கும் “சரத் பொன்சேகா” எதிர்க் கட்சிகளின் பொது வேட்பாளர். இவர்கள் இருவருக்கும் இடையே தான் போட்டி என்பது உறுதியாகி விட்ட நிலையில் மூன்றாவது வேட்பாளராகக் களமிறங்கி இருப்பவர், “இடது முன்னணி”யின் “டாக்டர்.கருணாரத்ன விக்கிரமபாகு”, இம்மூவரையும் தவிர்த்து பெயரளவில் போட்டியிடும் சில வேட்பாளர்கள் களத்தில் இருந்தாலும், இந்த முதல் இரண்டு வேட்பாளர்களில் யாருக்கேனும் ஒருவருக்கு வாக்களிக்க வேண்டிய கட்டாயம் தமிழ் மக்களுக்கும், ஏனைய சிறுபான்மையினருக்கும் உருவாகி இருப்பது ஏறத்தாழ தங்கள் உரிமைகளுக்கான இறுதிச் சடங்கை அவர்களே நடத்திக் கொள்வது போல இருப்பினும், இடையில் இருக்கும் ஒரு வாய்ப்பு நம்பிக்கை தருவதாக இருக்கிறது, அந்த வாய்ப்பு “இடது முன்னணி”யின் “டாக்டர்.கருணாரத்ன விக்கிரமபாகு” அவர்களை ஆதரித்து வாக்களிப்பதேயாகும், இவருக்கு ஏன் தமிழ் பேசும் மக்கள் ஆதரவு தர வேண்டும்? என்று அறிந்து கொள்வதற்கு முன்னர் முதலிரண்டு வேட்பாளர்களுக்கும் ஏன் வாக்களிக்கக் கூடாது என்பதையும் நாம் அறிந்து கொள்ள வேண்டும்.


ராஜபக்ஷேவும், பொன்சேகாவும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் மட்டுமில்லை, ஒரே உறையிலிருக்கும், தமிழ் மக்களின் விடுதலைக்கு எதிரான கூர்வாட்கள். “தமிழர் நலன்”, “தமிழர் விடுதலை” போன்ற சொல்லாடல்களையே வருங்காலத்தில் நசுக்கிப் போடக் காத்திருக்கும் நச்சுப் பாம்புகளில் எது நல்ல பாம்பு? என்பது போன்ற போட்டிதான் இவர்கள் இருவரின் போட்டியும். கடந்த ஆறு தேர்தல்களில் இலங்கையின் வேட்பாளர்கள் அனைவரும் முன்வைக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்த “தமிழ் மக்களின் உரிமைகள்” என்ற முன்வடிவைத் தகர்த்ததில் இவர்கள் இருவருக்கும் சரிபங்கு உண்டு. இது மட்டுமன்றி சிங்களப் பேரினவாதத்தின், சிறுபான்மை இன மக்களுக்கு எதிரான போட்டியாகவே “ராஜபக்ஷே VS பொன்சேகா” போட்டியை நம்மால் புரிந்து கொள்ள முடியும்.

தமிழ் மக்கள் தேர்தல் என்கிற களத்தைத் தங்கள் தனி அடையாளங்களோடும், தன்மானத்துடனும் எதிர் கொள்ள இயலாதவாறு முடக்கப்பட்டு, சிதைக்கப்பட்டுக் கிடக்கிறார்கள், இவர்களில் பலர் வாக்களிக்கப் போவதில்லை என்றாலும் எஞ்சிய தமிழ் மக்களின் வாக்குரிமை முழுமையான ஒரு தாக்கத்தை இலங்கை அரசியலில் உருவாக்க வேண்டுமேயானால் இம்முறை வாக்குகள் சிதறி விடக்கூடாது, மேலும் வாக்குகளைச் சிதறடிக்கும் பல்வேறு காரணிகளைக் கண்டறிந்து அவற்றைக் களைவதில் அரசியல் முகவர்களும், மக்களும் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகிறது. இலங்கையின் அரசியலில் கலந்து ஐக்கியமாகி விடுவதற்கு சொல்லப்படுகிற வழிமுறை அல்ல இது, மாறாக ஒருங்கிணைந்து தேசிய விடுதலை என்கிற கனவினை அதற்கான முகாந்திரத்தை அரசியல் ரீதியாக உயிர்ப்போடு வைத்திருப்பதற்கு ஒப்பானதாகும்.

இன்றைய இலங்கையின் அரசியல் சூழலும் அதற்கு இசைவாகவே இயங்கி வருகிறது, “ராஜபக்ஷே அண்டு கம்பெனி” குலை நடுங்கிப் போய்க் கிடக்கிறது, காரணம் வளர்த்த கிடாவின் எதிர்ப் பாய்ச்சல், தேர்தல் வெற்றிக்காக எங்கே நம்மைக் காட்டிக் கொடுத்து விடுவாரோ? “பொன்சேகா” என்று “ராஜபக்ஷே” குடும்பத்தினர் உள்ளூர அச்சம் கொள்வதோடு, இது அரசியல் வழியாகவும் தங்களின் இருப்பிற்கான கடைசிப் போர் என்பதை உணர்ந்து இருக்கிறார்கள், மேலும் இந்திய பார்ப்பன-பனியாக் கூட்டத்தின் எதிர்ப்பையும் தங்கள் பக்கமாக அவர்களே திருப்பிக் கொண்டிருக்கிறார்கள், இதற்குக் காரணம் ராஜபக்ஷேவின் சீன – பெளத்த இணக்கம், சீனம் உதவிக் கரம் நீட்டுகின்ற ஒரு மண்டல வல்லாதிக்கம் என்பதையும் தாண்டி உலகப் பொருளாதாரச் சூழலில் அமெரிக்க அடியாளின் மாற்றாக முன்னிறுத்தப் படுவதும் ஒரு காரணம், உளவியல் ரீதியாக சிங்களம் சீனத்தோடு இயற்கையாகவே இணங்கி இருக்கிறது, மத வழிபாட்டு ரீதியாகவும், பொருளாதார கையகப்படுத்தல் வழியாகவும் சிங்களம் சீனத்தோடு கொஞ்சிக் குலாவுவது இந்தியப் பார்ப்பன – பனியாக் கூட்டத்தின் வெறுப்புக்கான முதல் காரணி, பாதுகாப்பு ரீதியில் தங்கள் முழுமையான கட்டுப்பாட்டில் இருந்த தெற்குப் பகுதியும் இனி தலை வலியாக மாறி விடுமோ? என்று அச்சம் கொள்கிறது இந்திய பனியாக் கூட்டம்.

மேற்குலக நெருக்கடிகளுக்கும், போர்க்குற்றம் என்கிற பூச்சாண்டிக்கும், பயம் கொள்வது போல ராஜபக்ஷே குடும்பத்தினர் இந்திய முதுகில் ஏறிக் கொண்டு மேற்குலகை எதிர்கொள்ளவும், அதே மேற்குலகின் கருவியாக இந்தத் தேர்தலில் பொன்சேகா பயன்படுத்தப்படுவதும் வழக்கமான இலங்கை ஆளும் வர்க்கத்தின் வித்தை தானேயன்றி ஒருபோதும் உண்மையான நட்பு இல்லை என்பதுதான் அப்பட்டமான உண்மை. ராஜபக்ஷேவின் வித்தைகளையாவது “தனது இனத்திற்கு உண்மையாக” இருக்கும் வித்தை என்று கணக்கில் கொண்டாலும், பொன்சேகாவை ஒருபோதும் தமிழ் மக்களாலும், சிறுபான்மை இன மக்களாலும் ஏற்றுக் கொள்ள இயலாது என்பதை தெளிவாக உணர்த்த வேண்டிய கட்டாயம் இருக்கிறது, ஏனெனில் இன்றைக்குச் சிறுபான்மையினரின் வாக்குகளை வேண்டி விரும்பும் பொன்சேகா கடந்த ஆண்டில் இப்படிக் கொக்கரித்தார், " இது சிங்கள – பௌத்தர்களுக்குச் சொந்தமான நாடு, இங்கே சிறுபான்மையினர் எல்லாம் உரிமை கொண்டாட இயலாது" நேரடியாகவே ஒரு பேரின வெறிகொண்ட பொன்சேகாவும், அதற்கு ஆணையிட்டு அள்ளி வழங்கிய ராஜபக்ஷேவும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்களே அன்றி வேறொன்றுமில்லை. போர்க்குற்றங்களில் இருந்து தப்பித்துக் கொள்ளவும், பேரினவாத அடக்குமுறையின் போர் வெற்றிக்குச் சொந்தம் கொண்டாடவுமாய் தேர்தலை எதிர்கொள்ளும் இவ்விருவரையும் தமிழ் மக்களும் சரி, ஏனைய சிறுபான்மை மக்களும் சரி ஏற்றுக் கொள்ள மாட்டார்கள், ஏற்றுக் கொள்ளவும் கூடாது.


இந்த நிலையில் அண்மைக்கால இலங்கை அரசியலின் அணுகுமுறையை சில பொதுவான அலகுகளால் இனம் காண முடியும், பேரினவாத அடக்குமுறை அலகுதான் அது, இந்த அலகில் இருந்து சில நேரங்களில் மாறுபட்டுப் பயணிக்கும் ஒரு வேட்பாளர் தான் “டாக்டர்.குணரத்ன விக்கிரமபாகு”, இவரது அரசியல் செயல்பாடுகள் பெரிய வேறுபாட்டு அளவீடுகள் இல்லாதிருப்பினும், அடிப்படை மாற்றங்களை உள்ளடக்கி இருப்பதே இதற்குக் காரணம், போர் தீவிரமடைந்த காலகட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பம் திரட்டி “சிறுபான்மையினருக்கு எதிரான போரை அரசு உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும், தன்னுரிமை மிக்க அரசியல் தீர்வுகளை நோக்கி இலங்கை அரசு நகர வேண்டுமே தவிர போரின் வழியாக நகர்தல் தவறானது" என்கிற அடிப்படை மனித நேயம் மிகுந்த குரலை பாராளுமன்றம் வரையில் கொண்டு சென்றவர் தான் இந்த வேட்பாளர்.

இவை தவிர்த்து இந்த வேட்பாளரைத் தமிழ் மக்களும் சிறுபான்மையினரும் தேர்வு செய்து வாக்களிப்பதற்கு நிறையக் காரணிகள் இருக்கின்றன, அவற்றில் இன்றியமையாத முதல் காரணி. “தமிழ் மக்களின் தன்னாட்சிக் குரலை நெரிக்கும் சிங்களப் பேரினவாதத்தின் இருமுனைகளில் இருந்தும் தம்மைப் பாதுகாத்துக் கொண்டு, மீண்டும் ஒரு அரசியல் வழியான நெருக்கடியை, அழுத்தத்தை பேரினவாதத்தின் மீது திணிப்பது”, மேலும், குறிப்பிட்ட சதவிகித வாக்குகளை இந்த வேட்பாளருக்கு வழங்குவதன் மூலம் “முண்ணனியில் இருக்கும் இரண்டு வேட்பாளர்களும் 50 % திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற இயலாத வண்ணம் முட்டுக்கட்டை இடுவது”. இப்படிச் செய்வதன் மூலம் தமிழ் மற்றும் சிறுபான்மை இன மக்களுக்கு எதிராக எவரும் அறுதிப் பெரும்பான்மையோடு வெற்றி பெற இயலாது என்கிற செய்தியை சிங்களப் பேரினத்திற்கு நம்மால் உரக்கச் சொல்ல முடியும்.


இந்த நகர்வு ஒன்று தான், தமிழ் மக்களின் விடியலுக்குக் காலம் வழங்கி இருக்கும் தன்மானம் நிறைந்த ஒரே வாய்ப்பு, இந்த வாய்ப்பினை மேலும் அதிகரிக்கச் செய்யும், வகையில் முழுமையான பரப்புரைகளையும், திட்ட முன்வடிவுகளையும் புலத்தில் இயங்கும் அரசியல் தலைவர்களோடு இணைந்து (ஒட்டுண்ணிகள் மற்றும் பல்லக்குத் தூக்கிகளைத் தவிர்த்து) புலம் பெயர்ந்த மக்களும், தாய்த்தமிழ் நாட்டு ஊடகங்களும் சரியாகச் செய்ய வேண்டிய தருணம் இது, விடுதலையை நோக்கிய பயணத்தின் அடுத்த கட்டமாக, இதனை கருத்தில் கொண்டு தேர்தலை அறிவுப்பூர்வமாக எதிர்கொள்வது காலத்தின் தேவை. “தேர்தலைப் புறக்கணிப்பது, வாக்குகளைச் சிதறடிப்பது போன்ற செயல்கள் விடுதலைக் கனவை நாமே அழித்துக் கொள்வது போல அறியாமை மிகுந்தது மட்டுமன்றி, வரலாற்றில் மீள முடியாத முடக்கத்தைக் கொடுப்பதும் ஆகி விடும்”. இதனை உணர்ந்து இந்த வரலாற்றுப் பயணத்தில் நமது அரசியல் புரிந்துணர்வை நமது மக்கள் வெளிப்படுத்துவார்களா?? என்கிற கேள்விக்குப் பின்னர் ஒளிந்து கிடக்கிறது தமிழர்களின் தாகமான, தமிழீழத் தாயகம்.-கை.அறிவழகன்

Friday, October 23, 2009

pala.karupaiyah in thinamani

தினமணி கட்டுரை தவறாமல் படிக்கவும் !!!
அடிவயிற்றை முறுக்கவில்லையா?பழ . கருப்பையா


ஒரு தமிழ்ப் பெண் தன் தோளைத் தழுவச் சம்மதிக்காமல் தனித்தே வாழும் திருமாவளவன், ராஜபட்சவுக்குச் சால்வை போர்த்தித் தழுவியிருக்கிறாரே! தழுவும்போது கம்பளிப்பூச்சி ஊர்வது போல் உணரவில்லையா?

கட்சிகளெல்லாம் கிடக்கட்டும்! எழுபதாயிரம் ஈழத்தமிழர்கள் சாகவும், ஐந்து லட்சம் தமிழர்கள் புலம் பெயரவும், மூன்று லட்சம் தமிழர்கள் சிங்கள அரசின் முள்வேலிகளில் சிறைவைக்கப்படவும், இரண்டு லட்சம் தமிழர்கள் அகதிகளாய்த் தமிழ்நாட்டில் கதி கெட்டு அலையவும் காரணமான ராஜபட்ச வைத்த விருந்தை உண்ணவும், அவரோடு மனங்கொள்ளாமல் சிரித்துப்பேசி மகிழவும் டி.ஆர். பாலுவாலும், கனிமொழியாலும், திருமாவளவனாலும் எப்படி முடிந்தது?

""ஏன்டி... உன் புருசனைக் கொன்னவனோட உனக்கென்னடி சிரிப்பு வேண்டிக்கிடக்கு'' என்று தாய் மகளிடம் சினந்து கேட்டாளாம். ""போனவன் போயிட்டான்; நான் இருக்கேனே'' என்று மகள் புன்முறுவலோடு விடை இறுத்தாளாம்!

""கடைசி நேரத்தில் நீங்களும் பிரபாகரனுடன் இருந்திருந்தால் உங்கள் கதையையும் முடித்திருப்பேன்'' என்று இலங்கை அதிபர் ராஜபட்ச தமிழ்நாட்டில் இருந்து சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் திருமாவளவனிடம் நேருக்குநேர் நின்று சொல்லியிருக்கிறார்!

நாடாளுமன்ற உறுப்பினர் என்றால் ஏதோ வாழைக்காய் பஜ்ஜி, வெங்காய பஜ்ஜி போல ராஜபட்சவுக்கு அவ்வளவு சாதாரணமாகத் தெரிகிறது. பஜ்ஜி மாவுக்குத் தனித்து எந்த மதிப்புமில்லை! அது வெங்காயத்தோடோ, வாழைக்காயோடோ சேரும்போதுதான் அதற்குப் பெயரும் கிடைக்கிறது; வடிவமும் கிடைக்கிறது!

இந்தப் பஜ்ஜி மாவுக்கெல்லாம் வடிவம் கொடுப்பவர் கருணாநிதி என்பது ராஜபட்சவின் எண்ணமாக இருக்கலாம்! அப்படிப்பட்ட கருணாநிதியின் உயிர்நாடியோ, சென்னைக் கோட்டையில் இருக்கிறது. சென்னைக் கோட்டையில் கருணாநிதி நீடிப்பதோ, சோனியாவின் தயவில் இருக்கிறது. சோனியாவோ சிங்களவர்களின் உற்ற நண்பர். ஆகவே, சோனியாவின் தோழமை இருக்கும்வரை இவர்களை எல்லாம் ஒரு பொருட்டாக நினைக்கத் தேவையில்லை என்பது ராஜபட்சவின் எண்ணம்!

ஆனாலும் விடுதலைப் புலிகளைப் பார்த்து விடுதலைச் சிறுத்தைகள் என்னும் அமைப்பைத் தோற்றுவித்துக் கொண்ட திருமாவளவன், ராஜபட்ச "உன் கதையையும் முடித்திருப்பேன்' என்று சொன்னதைக் கேட்டுத் திகைத்துப்போய்த் திரும்பி வந்திருக்கலாமா? திருப்பிக் கொடுத்திருக்க வேண்டாமா?


"ராஜபட்ச! உன் கதையை முடிப்பதற்குப் பதிலாகப் புத்திகெட்டுப்போய் இந்தியா ஈழத்தின் கதையை முடித்துவிட்ட காரணத்தால், உன்னால் இவ்வளவு எக்காளமாகப் பேச முடிகிறது. எந்த விடுதலை இயக்கத்துக்கும் பின்னடைவுகள் வருவது இயற்கை; ஆனால், ஒரு விடுதலை இயக்கம் என்றாவது ஒரு நாள் தன்னுடைய இலக்கை அடையாமல் முடிந்ததாக வரலாறு இல்லை''-என்று ஒரு வார்த்தை சொல்லிவிட்டு வந்திருந்தால் திருமாவளவன் உலகத் தமிழினத்துக்கே தலைவராகி இருப்பாரே!

ராஜபட்சவின் நாட்டுக்கே போயும் ராஜபட்சவை நேருக்குநேர் நின்று உலுக்குகிற வாய்ப்பைத் தவற விட்டுவிட்டாரே! அதுவும் ராஜபட்ச, "ஈழத்துக்கு நீ வந்திருந்தால் உன்னையும் சுட்டிருப்பேன்' என்று சொல்லி அசிங்கப்படுத்திய பிறகும், அங்கு வாயை மூடிக் கொண்டிருந்துவிட்டு, இங்கே நம்முடைய மூலக்கடை முச்சந்தியில் நின்று கொண்டு, "இரத்தம் கொதிக்கிறது' என்று திருமாவளவன் முழங்குவதை, இனி யார் நம்புவார்கள்?

அப்படி நேருக்குநேர் கேட்டிருந்தால் என்ன செய்திருப்பார் ராஜபட்ச? கொழும்புச் சிறைக் கொட்டடியில் அடைத்திருப்பாரா? அடைத்திருந்தால் திருமாவளவனை விடுவிப்பது ஆறு கோடித் தமிழர்களின் கடமையாகி இருந்திருக்குமே!

இப்போது முகத்தை அழுத்தித் துடைத்துக் கொண்டு, தலையைக் கவிழ்ந்து கொண்டு, ராஜபட்ச அசிங்கப்படுத்தியதற்கு என்னென்னவோ அமைவுகளைத் திருமாவளவன் சொன்னாலும், யார் கேட்பதற்குத் தயாராக இருக்கிறார்கள்?

போன இடத்தில் அப்படியெல்லாம் பேசினால், "நன்றாக இருக்குமா?' என்று திருமாவளவனாகச் சொல்லிக் கொண்டிருக்க வேண்டியதுதான்! தன்னுடைய நாட்டுக்கு வந்த விருந்தாளியிடம் அப்படிப் பேசியிருக்கலாமா என்று ராஜபட்ச கவலைப்படவில்லையே!

இகழ்பவனின் பின்னால் போய்ப் பெறப் போவதென்ன என்று நம்முடைய அப்பன் வள்ளுவன் கேட்பான்! ""என்மற்று இகழ்வார் பின்சென்று நிலை''

முன்பொருமுறை தமிழ்நாட்டில் இந்தி எதிர்ப்பு உச்சத்திலிருந்தபோது மாநிலங்களின் அமைச்சர்களெல்லாம் பங்கேற்ற கூட்டத்தில், செல்வாக்குமிக்க மத்திய அமைச்சர் மொரார்ஜி தேசாய், "இந்தி இல்லாமல் இந்தியா இல்லை' என்று பேச, "இந்தி இருக்குமானால், இந்தியாவே இருக்காது' என்று அன்றைய தமிழக அமைச்சர் செ. மாதவன் பேசிவிட்டார் என்பதற்காக, ஊர்ஊராக நான்கு குதிரைகள் பூட்டிய சாரட் வண்டியில் செ. மாதவனை உட்காரவைத்து ஊர்வலம் விட்டு, ஐந்து ஆண்டு அரசியலை இதைச் சொல்லியே ஓட்டினார்களே தி.மு.க.வினர்!



அன்று மாமன்னன் அசோகன் இலங்கைக்குத் தன் மகள் சங்கமித்திரையை அனுப்பிப் பௌத்தத்தை வளர்த்ததுபோல, இன்று தன் மகள் கனிமொழியை அனுப்பிச் சிங்களவர்களோடு நேசத்தை வளர்க்கும் கருணாநிதி, ராஜபட்சவை எதிர்த்துத் திருமாவளவன் பேசுவதை ரசிக்க மாட்டார் என்றாலும், கருணாநிதி ரசிக்காததை எல்லாம் செய்யாமலிருப்பதற்குத் திருமாவளவன் என்ன தி.மு.க.வின் ஆயிரம் விளக்குப் பகுதிச் செயலாளரா?

தமிழுக்கும், தமிழனுக்கும் கேடு என்றால் சீறிவரும் சிறுத்தையாக இருந்தவரை, நாடாளுமன்றப் பதவியைக் கொடுத்து அடங்கிப் போகும் நிலைக்கு ஆளாக்கிவிட்டாரே கருணாநிதி!

முள்வேலி முகாம்களைப் பார்வையிட, அவற்றின் உண்மை நிலையைக் கண்டறிய மனித உரிமைப் பாதுகாப்புக் கழகத்தினரையும், செய்தியாளர்களையும் அனுமதிக்காத ராஜபட்ச, காங்கிரûஸயும் தி.மு.க.வையும் மட்டும் அழைத்தாராம்!

ஈழத்தைச் சுடுகாடாக்கிய ராஜபட்ச, சோனியா, கருணாநிதி என்னும் முக்கூட்டணி தங்களின் சிதைந்துபோன முகங்களைச் சீர்படுத்திக் கொள்ளும் முயற்சிதானே இது? பொத்துக்கிழிந்துபோன பெயரை இழுத்துவைத்துத் தைத்துக் கொள்ளும் முயற்சி அல்லாமல் வேறென்ன?

முள்வேலி முகாம்களில் ஈழத் தமிழர்களை ஆடுமாடுகளைப் போல் அடைத்துவைத்துக் கொடுமைப்படுத்துவதை ஓர் அமெரிக்கப் பெண்மணி சத்தம்போட்டு உலகுக்குச் சொல்லிக் கொண்டிருப்பதைத் தமிழ்நாட்டுக்கும் வந்து சொல்ல விரும்பியபோது, அவருக்கு "விசா' வழங்கவிடாமல் தடுத்து நிறுத்தியவர்தானே இந்தக் கருணாநிதி! அந்தப் பெண்மணியின் வருகை தன்னுடைய சாயத்தை வெளுக்கச் செய்துவிடும் என்னும் அச்சம்தானே காரணம்!

இந்தப் பத்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் "உல்லாசப் பயணத்தில்' இங்கிருந்தே இலங்கை அதிகாரிகள் உடன்வந்தார்களாம். கொழும்பில் சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டதாம்; ஹெலிகாப்டர்களில் பறந்தார்களாம்; ஐந்து நட்சத்திர விடுதிகளில் தங்கினார்களாம்; முப்பொழுதும் முப்பழங்களோடும் விருந்துகளாம்; வேதமே பாராட்டிய சோமபானங்களுக்கும் குறைவில்லையாம்! அரசியல் நெறியற்ற டக்ளஸ் தேவானந்தா கூட்டிவைத்த கூட்டத்தில் கலந்துரையாடினார்களாம்! இதற்குச் சிங்களவர்களோடேயே உரையாடியிருக்கலாமே!

ஈழத்துக்கான போர் சிங்களக்காடையர்களோடு மூன்றுமுறை நடந்தது; முப்பதாண்டுக் காலம் நடந்தது; அப்போதெல்லாம் இடையிடையே போர் நடக்கும்; சிங்களக்காடையர்கள் முண்டிப் பார்ப்பார்கள்; பின்பு பின்வாங்கி ஓடிப்போவார்கள்.


ஈழத்தில் வரிவசூல் நடந்தது; காவல் நிலையங்கள் இருந்தன; நீதிமன்றம் நடந்தது; பராமரிப்புப் பணிகளும், நிர்வாகப் பணிகளும் செவ்வனே நடந்தன. அந்தக் காலகட்டம் முழுவதும் அறிவிக்கப்படாத சுதந்திர நாடாகவே ஈழம் இயங்கியது!

நான்காம் ஈழப் போர் ஈழத்தைச் சுடுகாடாக்கியது. சிங்களக்காடையர்கள் ஒன்றும் ஓரிரவில் வீரர்களாய் மாறிவிடவில்லை. இந்தியப் பெருநாடு சிங்களவர்களை முன்னிறுத்தி அந்தப் போரை நடத்தி இந்தக் கொடுமையை அரங்கேற்றியது!
பாரதி சொன்னதுபோல எல்லாமே "பொய்யாய்க் கனவாய்ப் பழங்கதையாய்ப் போனதுவே!'

நேற்றுவரை சிங்களத்துக்கு நிகராகத் தமிழுக்கு ஆட்சிமொழி உரிமை வேண்டும்; அரசு வேலைகளில் உரிய பங்கு வேண்டும்; இலங்கையின் வடக்கு - கிழக்கு மாகாணங்களை உள்ளடக்கிய ஈழத்துக்குச் சுயநிர்ணய உரிமை வேண்டும் என்றெல்லாம் போராடியவர்கள், இன்று முள்வேலிச் சிறைகளில் இருந்துகொண்டு குடிக்கவும், குளிக்கவும் தண்ணீர் வேண்டும் என்று கண்ணீர்விடும் நிலைக்கு ஆளாகி விட்டார்களே! பிள்ளைக்குப் பாலில்லை; முதியோருக்கு மருந்தில்லை; கர்ப்பிணிப் பெண்கள் பிள்ளை பெற வசதியில்லை.

ஈழத்துக்கு முற்றாக விடுதலை கேட்டவர்கள் இன்று முள்வேலிச் சிறை முகாம்களிலிருந்து வீட்டுக்குப் போக மட்டும் விடுதலை கொடுத்தால் போதும் என்று கேட்கிறார்கள்; இந்த நிலைக்கு இவர்களை ஆளாக்கிய சோனியா காந்தி, கருணாநிதி கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராஜபட்சவைச் சந்தித்து,""நாட்டுக்கு விடுதலை கேட்கவில்லையே; வீட்டுக்குப் போகத்தானே விடுதலை கேட்கிறார்கள்; கொடுத்துவிட்டுப் போங்களேன்'' என்று எடுத்துச் சொல்லப் போய் இருக்கிறார்கள்! தமிழனின் தலைவிதியைப் பார்த்தீர்களா?

இவர்கள் போனதன் விளைவாக 50,000 தமிழர்கள் முள்வேலி முகாம்களிலிருந்து மறுநாளே விடுவிக்கப்படுவார்கள் என்னும் அறிவிப்பு இலங்கையில் வெளியாகவில்லை; கோபாலபுரத்தில் வெளியாகிறது; ராஜபட்சவும் கருணாநிதியும் வேறுவேறல்லவே; யார் வெளியிட்டால் என்ன? ஆனால், வெளிவிடப்பட்டவர்கள் ஐம்பதாயிரம் பேரா? ஐயாயிரம் பேரா? அல்லது வெறும் அறிவிப்போடு முடிந்துவிட்டதா என்பதெல்லாம் யாருக்குத் தெரியும்? யார் இதை அந்த அரக்கர் நாட்டில் சரிபார்க்க முடியும்?

இப்படிக் கருணாநிதி அறிவித்த மறுநாளே சிங்காரச் சென்னையில் சுவரொட்டிகள் மின்னின. ""நான்கே நாளில் ஈழத் தமிழர்களுக்கு விடுதலை வாங்கிக் கொடுத்த கலைஞரை வணங்குகிறோம்.''


அண்ணா விடுதலை இயக்கமாகத் தோற்றுவித்த ஒரு கட்சியில் விடுதலை என்பதை எவ்வளவு கொச்சையாகப் புரிந்து கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் இதிலுள்ள அவலம்; அதையும் ரசிக்கிறார் கருணாநிதி என்பதுதான் அதைவிடப் பேரவலம்!

உலகத் தமிழ் மாநாடு நடத்த முற்பட்டிருக்கிறார் முதலமைச்சர் கருணாநிதி. ஈழப் பேரழிவுகளுக்குப் பிறகு உலகத் தமிழர்கள் இந்த மாநாட்டைக் கருணாநிதி நடத்துவதை ஏற்கவில்லை! சில மாதங்களுக்கு இந்த மாநாட்டைத் தள்ளிவைத்து அவர்களை அமைதிப்படுத்தலாம் என்னும் கருணாநிதியின் எந்த முயற்சியும் எடுபடவில்லை. இப்போது உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு என்று பெயரை மாற்றி நடத்தப் போகிறார்கள். உலகத் தமிழர்களின் சினம் நியாயமானதுதானே!

உலகத் தமிழ் மாநாட்டை அண்ணா நடத்தினார்; எம்ஜிஆர் நடத்தினார்; ஜெயலலிதா நடத்தினார்; ஆனால், கருணாநிதியால் நடத்தவே முடியால் போய்விட்டதே!

தமிழைத் தாயாக உருவகிப்பது தமிழர்களின் வழக்கம். தாய் ஒருத்தி; பிள்ளைகள் இருவர்! இரண்டு பிள்ளைகளுக்கும் இரண்டு மார்பிலும் தமிழ்ப்பால் சுரந்தாள் அவள்! அவர்கள் இனத்தால், நிறத்தால், ரத்தத்தால், பழக்கவழக்கங்களால், பண்பாட்டால் அனைத்தாலும் ஒன்று; நிலத்தால் மட்டுமே வேறு, வேறு!

அண்மையில் அவளுடைய சிறிய பிள்ளைக்கு ஊறு நேர்ந்துவிட்டது; பொறுப்பாளா அவள்? அந்தப் பிள்ளைக்கு ஊறு விளைவித்த அரக்கன் அழிந்து, அந்தப் பிள்ளை தன்னுடைய மண்ணில் காலூன்றும் வரை உறக்கம் வருமா அவளுக்கு?

அந்தச் சிறிய பிள்ளையின் மண்ணைப்பிடுங்கிக் கொள்ள ஓர் அரக்கன் முயன்றான் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. அந்த அரக்கனுக்குத் துணைபுரிய தில்லிவாசிகள் விரும்பியதையும் புரிந்துகொள்ள முடிகிறது! ஆனால், மூத்த பிள்ளையின் மண்ணிலிருந்தே சிலர் தில்லியின் விருப்பத்தின்பேரில் அரக்கனுக்கு உதவியாக இருந்ததைத்தான் தாயால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை! கண்ணகி அழுததைப் போல் அரற்றி அழுகிறாள் தாய்! தன் இளைய மகனின் வம்சத்தில் எண்பதாயிரம் பேர் மண்ணைச் சிவப்பாக்கி விட்டு மாண்டுமடிந்ததை எண்ணி அழுகிறாள். இளைஞர்களெல்லாம் செத்து, இளம்பெண்களே விஞ்சி நிற்கும் கொடுமையை எண்ணி அழுகிறாள். அறத்தை "மடவோய்' என்று வாயாற வைகிறாள். நான் உயிர் பிழைத்திருப்பேனோ என்று அரற்றுகிறாள்!
மறனோடு திரியும் கோல் ""மன்மோகன்'' தவறு இழைப்ப
அறன் எனும் மடவோய் யான் அவலம் கொண்டு அழிவலோ?''
(-சிலம்பு, துன்பமாலை 40).

இளைய பிள்ளையின் வம்சத்தை அழிக்க மூத்தபிள்ளையின் வழியினரில் சிலரே மாற்றானுக்கு உதவிவிட்டு, தன்னுடைய வெக்கை தணியத் தனக்கே விழா எடுக்க நினைக்கிறார்கள் என்பதை அறிந்து, அவர்களின் விழாவினைப் புறந்தள்ளி விட்டாள் தாய்! உலகத் தமிழ் மாநாட்டை அவள் ஏற்கவில்லை! தாயல்லளோ அவள்!

அது மட்டுமன்று; தமிழ் மாநாட்டில் அகதிகளாய் வாழும் ஈழத் தமிழர்களுக்கு இந்தியக் குடியுரிமை அளிக்கப்பட வேண்டும் எனக் காஞ்சிபுரத்தில் தீர்மானம் போட்டிருக்கிறார் கருணாநிதி!

சென்ற மத்திய ஆட்சிக் காலகட்டத்தில் சோனியாவோடு சேர்ந்துகொண்டு ஈழத்தைச் சுடுகாடாக்கியதை இது போன்ற தீர்மானங்களால் ஈடுகட்டிவிட முடியும் என்று கருதுகிறார் கருணாநிதி!

""ஈழத் தமிழர்களுக்கு எந்தச் சலுகைகள், உரிமைகள் அளித்தாலும் எனக்கு உடன்பாடே! ஆனால், இங்கே ஈழத் தமிழர்கள் மட்டும் அகதிகளாய் இல்லை. திபெத்தியர்கள், பர்மியர்கள், வங்கதேசத்தினர் என்று ஏராளமானோர் அகதிகளாய் இருக்கிறார்கள். ஈழத் தமிழர்களை மட்டும் மத்திய அரசு தனித்துப் பிரித்துப் பார்க்குமாறு கருணாநிதியால் செய்ய முடியுமா?

ஈழத் தமிழர்களுக்குக் குடியுரிமை என்றால் அவர்களுக்கு உயர்கல்வி, அரசு வேலைவாய்ப்புப் போன்ற எல்லாம் உண்டா? அப்போது தானே அது முற்றான குடியுரிமையாய் இருக்க முடியும்!'' என்றெல்லாம் அடுக்கி அடுக்கி எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதா கேட்டாரே! ஒன்றுக்காவது விடை சொன்னாரா முதலமைச்சர் கருணாநிதி?

கருணாநிதி தான் அங்கம் வகிக்கும் மத்திய அரசை ஏற்கும்படி செய்ய வேண்டும்; அல்லது அரசை விட்டு வெளியே வந்து அதற்காகப் போராட வேண்டும்!
அப்படியெல்லாம் இல்லாமல் ஏதோ ஒரு பேச்சுக்குப் போட்டு வைப்போம் என்று, தான் நம்பாததையே தீர்மானமாக்குவது முழு மோசடி இல்லையா?

ஈழத் தமிழர்களுக்கு மத்திய அரசிலிருந்து என்ன உரிமைகள் பெற்றுக் கொடுத்தாலும் அனைவருக்கும் இசைவே!

கருணாநிதியும், சோனியாவும் அந்த இனத்துக்குச் செய்த கொடுமைகளுக்கு ஈடுகட்டவும், பாவங்களுக்குக் கழுவாய் தேடவும், எந்தச் சலுகை வேண்டுமானாலும் அளிக்கட்டும்; அளிக்க வேண்டும்! வெறும் 500 கோடி ரூபாயை அளித்துக் கைகழுவி விடும் ஏமாற்று வேலை வேண்டாம்!

ஆனால் அவர்கள் பிறப்பால் ஈழத் தமிழர்கள்; ஈழம் அவர்களின் தாயகம்! அங்கே அவர்களுக்கு வீடு வாசல், நிலம் கரை அனைத்தும் உண்டு. அவர்களுக்குச் சொத்துகளும் அங்கேதான்; சொந்தங்களும் அங்கேதான்!


ராஜபட்ச, சோனியா, கருணாநிதி என்னும் முக்கூட்டணி அரசியலில் ஆக்கம் இழந்த பிறகு.... அது நடக்காதா என்ன? முன்பு தெருவிலிருந்தவர்கள் இப்போது திருவை அடைந்திருக்கிறார்கள்; மீண்டும் திருவை இழந்து தெருவுக்குப் போக எவ்வளவு நேரமாகும்?

அப்போது தாங்கள் விரும்பும்வண்ணம் தங்கள் தாயகத்தை ஈழத் தமிழர்கள் உருவாக்கிக் கொள்வார்கள்!

தமிழர்களுக்கு இரண்டு தாயகங்கள் உண்டு. ஒன்று தமிழ்நாடு; இன்னொன்று ஈழம்!
போர்த் தோல்வி காரணமாகச் சோர்வுற்றிருக்கும் தமிழர்களை விரட்டிவிட்டால், இலங்கை முற்றாகச் சிங்களவர்களின் நாடாகிவிடும் என்பது ராஜபட்சவின் எண்ணம்!

கனடா, அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, நார்வே, தமிழ்நாடு என்று போனபோன இடங்களில் ஏதாவதொரு உரிமை பெற்று அவர்கள் ஆங்காங்கே இருந்துவிட வேண்டும் என்பதுதான் ராஜபட்சவின் விருப்பம்! அவர்கள் ஈழத்துக்குத் திரும்பிவிடும் எண்ணத்தைக் கைவிடச் செய்வதற்காகத்தான் கொடுமைகள் மிகுந்த முள்வேலிச் சிறை முகாம்களின் காலத்தை நீட்டித்துக் கொண்டே போகிறார் ராஜபட்ச!

இறைமகன் ஏசுவை சிலுவையில் அறையக் காரணமான யூத மத போதகர்கள் யாரையாவது ஏசுவின் உண்மைச் சீடர்கள் பதினோரு பேரில் எவனாவது கட்டிப்பிடித்ததுண்டா?

யூத இனத்தையே கருவறுத்த மன நோயாளி ஹிட்லருக்கு எந்த யூதனாவது பட்டாடை போர்த்திப் பாராட்டியதுண்டா?

கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தில், முன் தோன்றிய மூத்த தமிழினத்தைக் கருவறுத்த ராஜபட்சவுடன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பத்துப் பேரும் சிரித்து மகிழ்வதையும் சிலர் கட்டித் தழுவிக் கொள்வதையும் நிழற்படங்களில் பாருங்கள்!

அடிவயிற்றை முறுக்கவில்லையா?

Monday, October 19, 2009

tamil eela thaayagam - francis trichy

என் வாழ்கை, என் எண்ணம், என் பேச்சு, என் எழுத்து, என் மூச்சு அனைத்துமே எம் தமிழ் இன மக்களை நோக்கி தான்..
நான் இருக்கும் இடத்தில் இருந்தே ஏதோ ஒருவகையில் போராடி கொண்டே தான் இருக்கிறேன் என் இனத்துக்காக..
என்னை சுற்றிய கட்டமைப்புகளை உடைக்க முற்பட்டு தோற்றாலும் மீண்டும் உடைக்க முற்பட்டுகொண்டே இருக்கிறேன்...
விடியலை நோக்கிய என் பயணம் தொடர்ந்து கொண்டே தான் இருக்கும் என் வாழ்நாள் முழுவதும்...

இந்த பறந்துட்ட இவ்வுலகில் எல்லோரையும் நேசிக்கிறேன் என் எதிரி உட்பட..



அடடா தமிழா.. எடடா படை நீ.. அடிமை விலங்கை உடைத்தெறி.. இடடா ஆணை.. கொடடா செந்நீர்.. இனத்தை காப்போம் நாள் குறி.. நடடா களத்தே.. எடடா கைவாள்.. நட உன் பகைவர் தலை பறி.. தொடடா போரை.. விடடா கணைகள்.. சுடடா எழட்டும் தீப்பொறி.. நீ சுடடா எழட்டும் தீப்பொறி.....



'பத்துத் தடவை பாடை வராது
பதுங்கிக்கிடக்கும் புலியே தமிழா!
செத்து மடிவது ஒருமுறைதானடா
சிரித்துக்கொண்டே செருக்களம் வாடா!'



தேடி சோறு நிதம் தின்று – பல
சின்னஞ்சிறு கதைகள் பேசி – மனம்
வாடி துன்பம் மிக உழன்று –பிறர்
வாட பலசெயல்கள் செய்து –நரை
கூடி கிழபருவமெய்தி –கொடுங்
கூற்றுக் கிரையென்ன பின்மாயும் – பல
வேடிக்கை மனிதரைப் போல் -நான்
வீழ்வெ னென்று நினைத்தாயோ….


இந்தியன், திராவிடன், என்று சொல்லும்போது உதடுகள் ஒட்டாது..... தமிழன் என்று சொல்லும்போதுதான் உதடுகள் கூட ஓட்டும்.....


'வீரம் செறிந்த பயணத்தில் துன்பம் விளைவது, மூக்கு துவாரங்களில் சுவாசம் நிகழ்வது போல்... மிகவும் இயல்பானது. ஆனால், எந்தத் துன்பத்துக்கும் ஓர்
எல்லை உண்டு. துன்பத்தின் எல்லையில் நிற்கும்போதும் விழிப்படையாமல், மேலும் அதே பாதையில் பயணத்தைத் தொடர் வது விவேகமற்றது!'


எங்கோ இழைக்கப்படும் அநீதி உலகின் எல்லாப் பகுதிகளிலும் இழைக்கப்படுவதாக உணரவேண்டும்'


'நண்பர்களே! நம்முடைய தேர்வு வன்முறையா, அகிம்சையா என்பதன்று; அகிம்சையா, அழிவா என்பதுதான்'


எங்கள் புருவங்கள் தாழ்ந்துள்ளன
எங்கள் இமைகள் குவிந்துள்ளன
எங்கள் பற்கள் கண்டிப்போயுள்ளன
நாங்கள் குனிந்தே நடந்து செல்கின்றோம்

எங்களை நீங்கள் ஆண்டு நடத்துக
எங்களை நீங்கள் வண்டியில் பூட்டுக
எங்களை முதுகில் கசையால் அடிக்குக
எங்கள் முதுகு தோல்வியில் துவண்டுபோகட்டும்

தாழ்ந்த புருவங்கள் ஒருநாள் நிமிரும்
கவிந்த இமைகள் ஒருநாள் உயரும்
இறுகிய உதடுகள் ஒருநாள் துடிக்கும்
கண்டிய பற்கள் ஒருநாள் நறுக்கும்

அதுவரை நீங்கள் எங்களை ஆளுக
அதுவரை உங்கள் வல்லம் ஓங்குக !




எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு!
எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்,
இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே!

திங்களொடும் செழும்பரிதி தன்னோடும் விண்ணோடும்
உடுக்களோடும்
மங்குல்கடல் இவற்றோடும் பிறந்ததமி ழுடன்பிறந்தோம்
நாங்கள், ஆண்மைச்
சிங்கத்தின் கூட்டமென்றும் சிறியோர்க்கு ஞாபகம்செய்
முழங்கு சங்கே!

சிங்க ளஞ்சேர் தென்னாட்டு மக்கள்
தீராதி தீரரென் றூதூது சங்கே!
பொங்கு தமிழர்க் கின்னல் விளைத்தால்
சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு!

வெங்கொடுமைச் சாக்காட்டில் விளையாடும் தோளெங்கள்
வெற்றித் தோள்கள்!
கங்கையைப்போல் காவிரிபோல் கருத்துக்கள் ஊறுமுள்ளம்
எங்கள் உள்ளம்!
வெங்குருதி தனிற்கமழ்ந்து வீரஞ்செய் கின்றதமிழ்
எங்கள் மூச்சாம்!





தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்....

francis trichy துரோகிகளின் பட்டியல் இதோ

"நேர்மையாக இருப்பதாக காட்டுபவர்களை விட நேர்மையாக வாழ்பவர்களையே எனக்கு பிடிக்கும்" என்றார் தலைவர் பிரபாகரன். ஆனால் இன்று நடப்பது என்ன? நீண்ட நெடிய விடுதலைப் போராட்டத்தில் துரோகிகளின் எண்ணிக்கை அனுமன் வாலைப் போல் நீண்டு கொண்டே இருக்கிறது. கொலைச்சதியின் கூட்டுப்பங்காளிகளான சோனியாவின் காங்கிரஸ் காரர்களுடனும், கூட்டிக் கொடுக்கும் துரோகி கருணாவுடனும்
இருப்பவர்களை உண்மையான உணர்வாளர்கள் எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்? ஒரு பக்கம் கருணாவையும், சோனியாவையும் வாழ்த்திப் பேசி விட்டு மறுபக்கம் ஈழ ஆதரவு பேச்சை பேசினால் அவர்கள் தலைவர் சொன்னது போல் நேர்மையானவர்களா?

எதிரியின் இருப்பிடம் நமக்கு நன்றாக தெரிகிறது. ராஜபக்சேவும், கோதபாயாவும் அவர்கள் பிறந்த சிங்கள இனத்திற்காக சண்டையிடுகிறார்கள். ஆனால் நமக்குள்ளேயே இருந்து கொண்டு எச்சில் எலும்புகளுக்காக துரோகம் செய்யும் துரோகிகள் அவர்களை விடவும் ஆபத்தானவர்கள். இத்துணை காலமும் ஆடுகள் போல் தென்பட்டவர்கள் ஆட்டுத்தோல் போர்த்திய நரிகள் என்று இப்போதுதான் தெரிகிறது.

துரோகிகளின் பட்டியல் இதோ...(எதிரிகளை சேர்க்கவில்லை)

1. கருணா (எட்டப்பன், துரோகி, காக்கை வன்னியன், யூதாஸ் போன்ற பெயர்கள் அழிந்து கருணா என்ற பெயர் நிலைக்க காரணாமாக இருந்த இன துரோகி).

2. ஜெயலலிதா (கருணாவுக்கு செக் வைத்து சிக்கலில் மாட்டி விட்டு வேடிக்கை பார்க்காமல் ஒன்றுக்கும் உதவாத பிரச்சினைகளை பேசி, அகங்காரத்தால் அழிந்தவர். போரில் மக்கள் அழிவது இயல்பு என்ற தத்துவ முத்துக்களை உதிர்த்தவர், ஈழத்தை அமைத்து கிழித்து விடுவேன் என்று ஓட்டுக்காக வாய்சவடால் விட்டவர்).

3. திருமாவளவன் (எழும் தமிழ் ஈழம் என்று ஒரு பக்கம் சொல்லிக் கொண்டே மறுபக்கம் எழும் ஈழத்தை அமுக்குவது, ஒரு எம்.பி. பதவிக்காக கருணாவிடம் அடிபணிந்தது, மாவீரர் குடும்பத்தினரை தமிழகத்தில் இறக்கி விடுகிறோம், காப்பாற்றுங்கள் என்று சொல்லிய புலிகளின் தொடர்பை துண்டித்தது, ராஜபக்சேவின் நையாண்டி, நக்கல் ஜோக்குக்கு விழுந்து விழுந்து சிரிப்பது).

4. ராமதாஸ் (தன் மகனை பதவியில் வைத்துக் கொண்டே மக்கள் டி.வி.யில் சோக கீதம் பாடுவார், இப்போது கருணாவுடன் சேர்ந்து குரல் கொடுக்கப் போகிறாராம்)

5. விஜயகாந்த் (காங்கிரஸிடம் 300 கோடி வாங்கிக் கொண்டு வாயை பொத்திக் கொண்டு இருப்பது, காங். கூட்டணிக்காக சோனியாவை விமர்சிக்காமலிருப்பது, கருணாவின் UNDERGROUND பினாமியாக இருப்பது).

6. சிதம்பரம் (மெத்தப் படித்த மேதாவி. கொலைகாரர்களுக்கு 500 கோடி, 1000 கோடி என்று ஊக்கத் தொகை அளிக்கிறான் மீண்டும் மீண்டும் கொலை செய்வதற்கு).

7. ஜெகத் கஸ்பர் (தேன் ஒழுகுவது போல் நக்கீரனில் எழுதி கருணா, சிதம்பரம், சோனியாவின் உதவி இல்லாமல் ஈழத்தை அடைய முடியாது என்று மக்கள் மனதில் விஷ விதையை விதைப்பது).

8. தினமலர் (காசுக்காக தன் வீட்டு பெண்களையே கூட்டிக் கொடுக்க தயங்க மாட்டான்).

9. ரஜினிகாந்த், கமல், விஜய் Etc நடிகர்கள் (ரசிகர்களை தூண்டி விட்டிருந்தாலே புரட்சி ஏற்பட்டிருக்கும். எதுவும் செய்யாமல் கிழட்டு கருணாவை பல மணி நேரம் வாழ்த்திப் பேசுவது. அதிலும் விஜய், "ராவு காலம்" ராகுல் காந்தியுடன் ஈழ மக்களுக்கு எப்படி நல்லது செய்வது என்று பேசுகிறாராம். ஆப்படித்தவுடன் அடங்கி விட்டார். இந்த நடிகர்கள் கருணா ஏவும் வருமான வரி சோதனைக்கு பயந்து
அடங்கி ஒடுங்கி விட்டார்கள். பல கோடி ரூபாய் வருமானம் வெளிநாடுகளில் தமிழர்கள் படம் பார்த்ததால்தான் சம்பாதிக்க முடிந்தது என்பதை மறந்து விட்டார்கள்).


10. வைரமுத்து (கருணாவின் அடியை வருடுவதுதான் வேலை. மன்னர் கருணாவை வாழ்த்திப் பாக்கள் பாடி பரிசில் பெறுவதுதான் இவருடைய முதல் வேலை)

11. வீரமணி (கருணாவின் அடிவருடி, இவன் கையால்தான் தலைவர் பழரசம் வாங்கி குடித்து உண்ணாவிரதத்தை முடித்தார். இப்போது அவரே வருத்தப்படுவார்)

12. ஜெகத்ரட்சகன் (கருணாவின் அடிவருடி)

13. சுப. வீரபாண்டியன் (கருணாவின் அடிவருடி)

14. காங்கிரஸ் பன்னிகள் (ராஜபக்சேவின் குண்டியை நாக்கால் நக்கி கழுவி விட்டு அதில் சந்தன மணம்தான் வருகிறது, நாறவில்லை என்று சர்டிபிகேட் கொடுக்கிறார்கள்).

15. நக்கீரன் (பிரபாகரன் படத்தை கிராபிக்ஸ் பண்ணி பணம் பார்ப்பதில் எக்ஸ்பர்ட். பிரபாகரன் தன் உடலை பார்ப்பது போல் வந்த படத்தை பற்றி கேட்டால் "அது நம்ம ரெடி பண்ணினது சார்" என்கிறான்).

மக்களின் முன்னேற்றத்திற்காக சாணக்கிய மூளையை உபயோகப்படுத்தினால் அதை "ராஜ தந்திரம்" என்று சொல்லலாம். ஆனால் தனக்கும், தனது குடும்பத்திறகாக மற்ற எல்லோரையும் முட்டாளாக்க நாடகங்களை நடத்தினால் அதற்கு பெயர் ராஜ தந்திரம் அல்ல (துரோகத்தனம், மொள்ளமாரித்தனம், முடிச்சவிக்கித்தனம்).

ஆலமரத்தில் ஏராளமான விழுதுகள் உருவாவது போல் கருணா என்ற ஒற்றை துரோகியிடமிருது இவ்வளவு பேரும் உருவாகியிருக்கிறார்கள். எட்டு கோடித் தமிழர்களை 80 துரோகிகள் சேர்ந்து நன்றாக ஏமாற்றுகிறார்கள். இவர்களால் ஒட்டு மொத்த தமிழ்நாட்டு தமிழர்களுக்கும் கெட்ட பெயர் ஏற்படுகிறது.
திருமாவளவன
3. திருமாவளவன் (எழும் தமிழ் ஈழம் என்று ஒரு பக்கம் சொல்லிக் கொண்டே மறுபக்கம் எழும் ஈழத்தை அமுக்குவது, ஒரு எம்.பி. பதவிக்காக கருணாவிடம் அடிபணிந்தது, மாவீரர் குடும்பத்தினரை தமிழகத்தில் இறக்கி விடுகிறோம், காப்பாற்றுங்கள் என்று சொல்லிய புலிகளின் தொடர்பை துண்டித்தது, ராஜபக்சேவின் நையாண்டி, நக்கல் ஜோக்குக்கு விழுந்து விழுந்து சிரிப்பது).

Sunday, October 18, 2009

தமிழீழநாதன் thanjavur

என்ன இந்த காலப்போரட்டம் ...
என் சாதியின்
பதுங்கு குழியெல்லாம்
பாடைகுழிகளாய் ....

கருவில் இருந்து கூட என் இனம்
கருகியே பிறக்கிறதே!
அன்று முறத்தால் அடித்த இந்த கரத்தில்
இன்று அதுவாய் மாறி துப்பாக்கிகள்...

உலகாண்ட என் சாதி இன்று
உலகமெங்க்கும் அகதிகளாய்...
எண் சொல்ல என் இனத்தின் பாடுகளை...
கேட்டு பாருங்கள் கண்ணீர் வடிக்கும் ஏடுகளை...

அப்பா இறந்து கிடந்தால்
அழக்கூட முடியாது...
அழகுதங்கையின் கற்ப்புக்கு
ஆண்டவன்தான் காவல்...

ஈழத்து தேசமெங்கும் வெண் கற்கள்..
அடடா! அது இறந்து என்சாதின் பற்கள்..
வன்னி வனமெங்கும் வெள்ளை விறகுகள் ..
கண்ணீரோடு சொல்கிறேன் அது என்சாதி எலும்புகள்...

அன்று ஒருநாள் என் இனம்
உலமெங்கும் புகழ் பரப்பியது ...
இன்று உலகமெங்கும் ஓலமிடுகிறது...
தமிழனின் இரத்தத்தில் கொலமிடுகிறது...

ஆணையிரவு இரவுகளுக்கு தெரியுமா ?
இழக்கப்பட்ட என் சாதி கற்பின் எண்ணிகையை ..
கிளிநொச்சியின் கிளிகளெல்லாம் சொல்கிறது...
இறக்கும் என்சாதியின் இன்னல்களை...
முல்லைத்தீவு எங்கும்
மொய்க்கின்ற கழுகுகளுக்கு தெரியுமா ? - அது
ஒருஇனப்போராட்டத்தின்
இறைச்சி என்று ...

வன்னி காட்டு மரக்கிளைகளே
உங்களுக்கு தெரியுமா ?
நீங்கள் சுமப்பது என்
சொந்தம்களின் சதைஎன்று...

யாழிசை கூட ஒப்பாரியாக
யாழ்ப்பான சோகத்தை மீட்டும்...
அடடா தமிழா! எந்த நெருப்புடா - இதயத்தில்
இனவுணர்வினை ஊட்டும்...

கூப்பிடும் தூரத்தில்
கோடி சனமிருந்தும்...
வீதியெங்கும் கிடக்குதடா
நாதியின்றி தமிழனின் பிணம்...

என் இனம் செய்த அவலம் என்ன?
இறைவா நீ சொல்லிவிடு -இல்லையேல்
என் இனத்தை
கருவிலேயே கொன்றுவிடு ...

கவரிமாண் அவளின்
கற்ப்பினை காக்க
இறக்க கூட சுதந்திரம் இல்லாத போது
இறைவா நீ இங்கு தேவையா ?

பாஸ்பரஸ் குண்டுகளில்
பறிபோகும் என் சாதிக்காக
பரஸ்பர அறிக்கை வெளியீடு -
இறைவா அரசியல் சாதியினை
அழித்திட வரம்கொடு...

அங்கே கொன்றுகுவிக்கும் அந்த
தலைகளை பொறுக்கி
இங்கே வாக்கு பெட்டியை
நிறைக்கிறான் வாக்குபொருக்கி..

வாசலுக்கு வரும்
வாக்கு பிச்சைகாரனே
வராதே என் வீட்டிற்கு... வந்தால்
செற்றிடுவாய் சுடுகாட்டிற்கு ...

கடல் ஒன்றும் தூரமில்லை
காளைகலாம் எங்களுக்கு - ஆயுதம்
கைமீது எடுத்துவிட்டால்
கருமாதி உங்களுக்கு ...

ஈழத்து குருதியலே
ஏழுகோடி எழுதுகிறான்
அரசியல் சாசனத்தை... அன்புடையீரே
நீங்களிடும் வாக்கினால்
காப்பாற்றலாம் நம் இனத்தை...

காமத்து தலைவனை
காணவில்லை என்பதற்கு
நாற்பதாயிரம் பெண்களை
நாசமாக்கி பார்த்தவளே..
இத்தாலி பெண்மணியே இரக்கமாயிறு
இல்லையென்றல் இறக்கநேரிடும் ....

ஈழத்தின் பிணவாடை இங்கே தெரியும்
அந்தநாளின் இத்தமிழகம் எரியும்...

RAJAN Fernando

எம் தலைவன் புலியாய்,புயலாய், காற்றாய்
விரைவில் வெளியில் வருவான்.

இந்திய, சிங்கள பொய் மூட்டைகளை பஞ்சு பஞ்சாக்க…
எம் தலைவன் காற்றாய்,தீயாய் ,
பூமியில் இடியாய் இறங்குவான்.

அடேய்! பச்சைப் பொய்க் கூட்டமே!
ஈழத்தாய்களின் கண்ணீர், தாய்ப் பால், இரத்தம்,சாபம் ….
எல்லாம் ஒன்றாய் திரண்டு தான் பிரபாகரனாக மாறி இருக்கிறது.

உங்களின் தலைகளை , இலங்கை மண்ணில் உருளச் செய்யாமல் என் தலைவன் சாகமாட்டான்.
ஆம், துரோகிகளே!
நண்பர்களே!
தோழர்களர்களே!
வீரர்களே!
வெறும் வெற்றுச் சோத்துப் பண்டாரங்களே!
ஏய், உலகத் தமிழ்ச் சாதியே!
இந்த செய்தியை உலக தமிழர் வரலாற்றில் இப்போதே குறித்து வைத்துக் கொள்!
ஈழம் விடுதலை அடைந்த பிறகே எம் தலைவனின் தலை சாயும்…!

***எத்தனை முறை இறந்தாலும் நம் தேசிய தலைவர் இதுவரை உயிர்த்தெழுந்து வந்துள்ளார்.

இந்த முறையும் அதுவே நடக்கும்.

அதற்கு முன் நாம் என்ன செய்ய போகிறோம் என்பதில் அடங்கியுள்ளது அவரது வருகைக்கான அர்த்தம்.****





தமிழா!
மூவேந்தர்களின் வாள் ஆண்ட பூமியை ! இன்றோ
முண்டாசு கட்டிக்கொண்டு ஆள்கின்றன பல முண்டங்கள்,

சேற்றிலும் சகதியிலும் விழ்ந்து கொண்டுள்ளோம் !
என்றோ பார்ப்பானியத்தில் விழுந்ததால்,

துர்நாற்றத்தை உணர ஆரம்பித்து விட்டோம்!
நீ இன்னும் சாக்கடை அரசியலை அனுமதிப்பதால்,

சிறகுகள் இருந்து பறக்க விட்டால்
சிறகுகள் முதிர்ந்து போகும் !
உறவுகள் இருந்து பழாக விட்டால்
வாழ்க்கை வெறுத்து போகும்!
உறவுகள் அழிந்து கொண்டிருக்க
நமக்கு ஏன் இன்னும் உறக்கம்,

இன்று எனக்குள் எரிகின்ற கோபம்!
நாளை உனக்குள்ளும் சுடர் விடுமடா ,

என் கிராமத்தின் இயற்க்கை
எந்தன் இதயத்தை வருடிச்செல்ல !
என் தாயின் அரவணைப்பு
எந்தன் முச்சை உயிரோடு அணைக்க !
என் தங்கையின் சிரிப்பொலி
எந்தன் நினைவுகளை கொய்ய !
என் தோழியின் குறும்புகள்
எந்தன் சிறகுகளை வானில் பறக்க விட!
இத்தனை உயிருள்ள உணர்ச்சிகளுக்கும் மத்தியில்
நான் வாழ நினைக்கிறேன் தீப்பிழம்பாய்!

காக்கை இனத்தின் ஒற்றுமை அதன் நிறத்தில்!
இரவின் ஒற்றுமை அதன் வெளிச்சத்தில் !
சாலைகளின் ஒற்றுமை அதன் பிரிவில் !
கடலின் ஒற்றுமை அதன் அலையில் !
கார் மேகத்தின் ஒற்றுமை மழைத்துளியில்!
இத்தனை ஒற்றுமைகளுக்கும் இயற்கை சாட்சியாக!
நமது இனத்தின் ஒற்றுமை எதன் சாட்சியாக ?

அடேய் திராவிடத்தை உனது செருப்பாக
மாற்றிய கருநாக பாம்பே !!!!!!!!!!!!!!!!!!!
இட்லிக்கு மாவாட்ட முடியாமல் என் இன அழிவிற்க்கு
வாலாட்டி கொண்டிருக்கும் இத்தாலி சூனியக்காரியே!

நீங்கள் சிதைத்த கண்ணாடி துண்டுகளில்
மீண்டும் உங்கள் முகத்தை பார்க்க நினைக்கிறிர்கள் போலும் !
புரிந்துக்கொள் அந்த துண்டுகளின் கூர்மை கூட
காத்திருக்கும் ஒருநாள் உங்களின் உயிரை காவு வாங்க!

வேதங்களில் சொல்லாத வேதத்தை ! உனக்கு
உணர்த்த புறப்பட்டு விட்டான் எந்தமிழன்,
நீ கட்டவிழ்த்த கதைகளுக்கு ! பதில்
கொடுக்க புறப்பட்டு விட்டான் எந்தமிழன்!

மூடுபனி சாலையிலே நீ நடக்கும் பொழுது
உன் கண்ணுக்கு தெரிவது கருமை நிறம் மட்டுமே !
அது எந்தமிழ் இனத்தின் நிறம் ! சற்றும்
திரும்பி பார்த்து விடாதே ! காத்து கொண்டுள்ளான்
உங்கள் எகத்தாள பேச்சுக்கு முடிவுகட்ட,

என்றோ செய்த ஒரு தன்மான பிழைக்கு
எங்கள் உறவுகளை தொலைத்தோம் அன்றோ!
இன்றோ மேலும் ரத்தபலி கேட்டால்!நாங்கள்
ஒன்றும் உன் விருந்துக்கு வந்த கோழி அல்ல!
உண்மைகளை உலகுக்கு உணர்த்த வந்த புலி,

நாங்கள் பதுங்கும் நேரம் உனது தோல்விக்காக!
நாங்கள் பாயும் நேரம் உனது அழிவுக்காக !

வருவோம் மீண்டும் புலியாக !
நீ அழிய காத்திரு சுனாமியாக !

letter for thirumavalavan

திருமாவுக்கு ஒரு கடிதம
அன்பின் திருமா, கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மொத்தமாக காங்கிரஸ் திமுக கூட்டணி தோற்றுவிடக் கூடாது என்று நினைக்க காரணம் இருந்தது. திமுகக் கூட்டணியில் திருமாவும், அதிமுக கூட்டணியில் வைகோவும் வெல்ல வேண்டும் என்று விரும்பியிருந்தேன். மற்றவர்களைப் பற்றி அதிகம் யோசிக்கவில்லை.

இலங்கைப் போரின் முடிவு பற்றியும் பெரிதாக எதிர்பார்ப்பில்லாத தருணம் அது. ஆயிரக்கணக்கில் தமிழர்கள் மடிவதும், இலட்சக்கணக்கில் தமிழர்கள் உயிரைக் காத்துக் கொள்ள ஓடிக் கொண்டிருப்பதுமான செய்திகள் ‘சில’ ஊடகங்களில் வந்து கொண்டிருந்த போது இந்தியா மெளனம் சாதித்துக் கொண்டிருந்தது. டெல்லியில் தமிழனுக்காக உரத்துக் குரல் கொடுக்க யாருமில்லாமல் வெறுமை சூழ்ந்திருந்தது. திருமாவும் வைகோவும் அந்த இடத்தை நிரப்புவார்கள் என்ற நம்பிக்கை துளிர்க்கத் துவங்கிய வேனிற்கால பருவம் அது.

விருப்பம் ஐம்பது சதவிகிதம் நிறைவேறியது. வென்றீர்கள், என்றாலும் பல் பிடுங்கப்பட்ட பாம்பாக உலவிக் கொண்டிருந்தீர்கள். பெரிதாக வருத்தமடையவில்லை.

ஆனால் நேற்று ராஜபக்சேவுடன் குலாவிய என் இன நொண்டிச் சிங்கத்தை தொலைக்காட்சியில் பார்த்தபோது அருவெருப்பாக இருந்தது. இது ராஜதந்திரம் என்று சொல்லி மழுப்பப்படும் என்று எங்களுக்குத் தெரியும் என்பதால் அவ்வாறு சொல்லி இன்னும் கொஞ்சம் அசிங்கப்பட வேண்டாம்.

நீங்கள்(குழு) எப்படி பேசினாலும் உங்களின் எந்த வேண்டுகோளும் இலங்கையில் நிறைவேற்றப்படவும் போவதில்லை; இலங்கைத் தமிழனின் வாழ்வும் மாறப்போவதில்லை என்பதை அங்கு செல்வதற்கு முன்பாகவே நீங்கள் அறிந்திருப்பீர்கள் என்றாலும் புன்னகைத்துக் கொண்டு விமானம் ஏறினீர்கள். என்றாலும் நம்பிக்கையில்லா தமிழர்கள் வாழ்த்துக் கூற தயங்கவில்லை.

முகாம் சந்திப்புகளை முடித்துவிட்டு அதிபரை பார்க்கப் போகும் போது உங்கள் முன்னால் இரண்டு சாத்தியங்கள் இருந்தன. ஒன்று அதிபர் குழாமிடம் முகத்தை கடுகடுவென்று வைத்துக் கொண்டு ஒரு சாமானியத் தமிழனின் கோபத்தையும் கண்டனத்தையும் குழுவில் இருந்த நீ ஒருவனவாவது காட்டியிருக்கலாம்.சிங்கத்தின் குகைக்குள் சென்று சிங்கத்தை சந்தித்தபோது உங்கள் வீரமும் தைரியமும் செருப்போடு சேர்த்து வெளியில் நின்றுவிட்டது போலிருக்கிறது. கூனிக் குறுகி, சிரித்து வழிந்து நீங்கள் அசிங்கப்பட்டதுமில்லாமல், மொத்த தமிழினத்தையும் கேவலப்படுத்தியிருக்கிறீர்கள்.


அல்லது அதிபரை எதிர்த்து உங்களால் பேச முடியாது என்ற பயம் உங்கள் தொடையை நடுங்கச் செய்திருக்கும் பட்சத்தில் அந்த அதிபர் சந்திப்பை புறக்கணித்து எதிர்ப்பை பதிவு செய்திருக்க வேண்டும்.

இரண்டும் இல்லாமல் அதிபர் மாளிகையில் குலாவிக் கொண்டு திரும்பியிருக்கிறீர்கள். ராஜபக்ஷேவும் அந்த சகோதரன்களும் என்ன உங்களின் மச்சான் உறவா? அவர்கள் நீங்கள் “இறந்திருப்பீர்கள்” என்பார்கள், அதை நீங்கள் “ஜோக்”காக எடுத்துக் கொள்வீர்கள். எவ்வளவு அவமானகரமான நிகழ்வு இது.

இந்தியா வல்லரசு தேசம் என்ற கொடியேற்றுகிறீர்களே அந்த தேசத்தின் ஆளுங்கட்சி குழுவல்லவா நீங்கள். மிதித்தெறிய வேண்டியவனிடம் மண்டியிட்டு சரணாகதியடைந்த கொள்கை திருவிளக்காக நாடு திரும்பியிருக்கிறீர்கள்.

கொழும்பு செல்லும் நாடாளுமன்ற குழுவில் உங்களின் பெயரைப் பார்த்தவுடன் சரியான முடிவுக்கு வர முடியவில்லை. ராஜபக்ஷேவின் செயல்களை ஆதரிக்கும் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர்களோடு செல்லும் உங்களால் என்ன செய்துவிட முடியும் குழப்பம் இருந்தாலும், வாழ்வில் உச்சபட்ச துன்பங்களை உணர்ந்துவரும் மக்கள் வாழும் முகாமுக்கு நீங்கள் நிச்சயம் செல்ல வேண்டும் என்ற விருப்பம் இருந்தது. குறைந்தபட்சம் நமக்காக குரல் கொடுப்பவனை பார்த்துவிட்ட சந்தோஷம் அவர்களுக்கு கிடைக்கலாம்.

அடுத்த நாள் அதிபர் மாளிகையில் அரங்கேறும் அசிங்கத்தை உணராமல் அவர்களும் அழுது புலம்பியிருக்கிறார்கள். வாழ்வின் அடிமட்ட கசப்போடு இலட்சக்கணக்கான மக்கள் கழிந்த பீ மூத்திரத்தின் நாற்றம் இலங்கைக்கே சென்றுமா உங்கள் நாசியில் ஏறவில்லை.

ஹிட்லர் கூட செய்யாத செயல்களைச் செய்பவன் இந்த ராஜபக்சே என்று மார்தட்டிய திருமாவை அவனது கால்களுக்கடியில் குலையும் நாய்குட்டியாக பார்கக் வேண்டி வரும் என்று நினைக்கவில்லை.

தேர்தலுக்கு முன்பாக நீங்கள் காங்கிரஸ் கட்சியை மென்று தின்று கொண்டிருந்தீர்கள். நீங்கள் கொள்கைப் பிடிப்புடையவர் என்ற நம்பிக்கை இருந்ததால் தீவுத்திடலில் சோனியாவுடன் மேடையேற மாட்டீர்கள் என்றிருந்தேன். ஏறினீர்கள். கர்ஜித்தீர்கள். தேர்தலில் வென்றாக வேண்டும், நாடாளுமன்றத்தில் குரல் உயர்ந்தாக வேண்டும் என்பதால் அது தற்காலிக உடன்படிக்கை என்று நானாக சொல்லிக் கொண்டிருந்தேன்.


ஆனால் சாதாரண மூன்றாம்தர அரசியல்வாதியின் பதவி ஆசை தவிர உங்களிடம் கொள்கைபிடிப்பு என்று எதுவுமில்லை என்பதை உணர்ந்து கொள்ளும் போது ஆயாசமாக இருக்கிறது. வெறும் பதவிக்காகத் தானே இத்தனை கும்பிடுகளும்.குறுகல்களும்

உங்களின் முகத்திரை கிழிந்து தொங்குகிறது. இன்று கூட இந்தக் கடிதத்தை பகிரங்கரங்கமாக பதிவு செய்து கொஞ்ச நாட்களாவது தமிழ் உணர்வோடு பேசிய உங்களை அவமானப்படுத்த வேண்டும் என்று நினைக்கவில்லை. ஆனால் நான் நினைப்பதைத்தான் சாதாரணத் தமிழன் நினைத்துக் கொண்டிருப்பான். பதவியில் இருக்கும் உங்களால் அதை உணர முடியுமா என்று தெரியவில்லை. உங்களின் செயலை கண்டிப்பதற்கு இந்தக் கடிதம் தவிர வேறு வழி எனக்குத் தெரியவில்லை.

ஆனால் ஒன்று, தமிழுக்காக உருவாகும் ஒவ்வொரு தலைவனும் அழிந்து வருகிறான். அல்லது அழிக்கப்படுகிறார்கள்.

யார் திட்டமிடுகிறார்கள்?

vunarvu

உணர்வுகள்
-----------------
உயிரை இழந்தோம்
உடலை இழந்தோம்
உணர்வை இழக்கலமா ?

உணர்வைகொடுத்து..
உயிராய் வளர்த்த
கனவை மறக்கலாமா ?..

தோல்வி நிலையென நீ நினைத்தால்
மனிதன் வாழ்வை நினைக்கலாமா ?..

யுட்தங்கள் தோன்றட்டும் ..
ரத்தங்கள் சிந்தட்டும்
பாதை மாறலாமா ?...
ரத்தத்தில் ரத்தத்தில் அட்சங்கள் வேகட்டும் ..
கொள்கை மாறலாமா ?

உடல் முழுவதும் வீரம்
பின் ஏன் கண்ணின் ஓரம் ஈரம் ...

விடியலுக்கு இல்லை தூரம்
இனியும் மனதில் ஏன் பாரம் ..........................

வாசிக்க கிடைக்காத வரலாருகளைத் தின்று செரித்து ..
நின்று சிரிக்கும் நிஜம் ......

friendship

நிலையான நட்பு
-------------------
முகம் பார்க்காமல் முதல் அறிமுகம்
வார்த்தைகளில் தொடங்கி வருடங்கள் பல கடந்து வளர்பிறையை ...
முகவரிதெரியாமல் முழு நிலவாய் ...
அகம் அரியது உன்னிடம் இனம் புரியாத நட்பு ...
எண்ணங்கள் நினைவுகளில் இடும் அலங்காரம் ...
இனிய நாட்கள் இன்ப ஓளி வீசி மலர்ந்து சிரிக்கும் ...
நெருடல்கள் இல்லாது வணங்கி கொண்டு ...
நெஞ்சை வருடி நெகிழ்வு தந்தது வுனது நட்பு ...
இடங்கள் பல மாறியது வுண்டு ...
தொடர்ந்து வரும் பிறவிகள் போன்றே இணைந்தும் வந்ததுண்டு...
அன்பே உருவான இனிய இதயத்தோடு ...
முதுமை வரைக்கும் வருமோ இளமை மாற நட்பு ...
கண்டதும் உயீரின் கற்பனை மறைந்து விடும் ...
கொண்ட நட்பினால் உள்ளம் அளவில்லா மகிழ்ச்சிகொள்ளும் ...
எல்லைதனை வகுத்து புரிந்து கொண்டல் ...
குறை இன்றி நெறியோடு நீண்ட நாள் வாழ்ந்திடும் நிலையான நட்பு .....

Saturday, October 17, 2009

pattukkottai kalyaanasundaram

நாம் எந்த ஆயுததை எடுப்பது என்பதை நமது எதிரிகள் தீர்மானிக்கிறார்கள் - மாவோ

தானா எல்லாம் மாறும் என்பது
பழைய பொய்யடா -பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்

“பகுத்தறியாதவன் ஒரு மூட நம்பிக்கைவாதி
பகுத்தறிய முடியாதவன் ஒரு முட்டாள்
பகுத்தறியத் துணியாதவன் ஓர் அடிமை” - எச். டிரம்மண்ட்

பத்துத் தடவை பாடை வராது
பதுங்கிக் கிடக்கும் புலியே தமிழா
செத்து மடிதல் ஒரேஒரு முறைதான்
சிரித்துக் கொண்டே செருக்களம் வாடா!
முத்தமிழோடு மோதினார் பகைவர்
முடங்கிக் கிடப்ப தென்ன நீதி
குத்தும் கணைகள் குண்டுகள் வரட்டும்
குருதி பெய்யடா! கொட்டும் முரசே!! - அய்யா காசி அனந்தன்

medicine for tamils

எங்கள் நாட்டில்
எல்லா திசைகளில் இருந்தும்
கடல், அலைகளை
அள்ளி வருகிறது-ஆனால்
தென் திசை கடல்
மட்டும் அகதிகளை
அள்ளி வருகிறது.
பஞ்சாபிலிருந்து வந்தால்
"பஞ்சாபி"
ராஜஸ்தானிலிருந்து வந்தால்
"ராஜஸ்தானி"
கேரளத்திலிருந்து வந்தால்
"மலையாளி"
பாகிஸ்தானில் இருந்து வந்தால் கூட
அவன் "பாகிஸ்தானி"
ஈழத்திலிருந்து வந்தால் மட்டும்
ஏனடா "அகதி" .
தமிழா திருந்து!
தமிழ் ஈழம் மட்டுமே
இந்த வலிகளுக்கெல்லாம்
மருந்து!!!!!

eelam flag

வீரத்தை குண்டுகள் துளைக்காது
வீரனை சரித்திரம் புதைக்காது
நாட்டை நினைக்கும் நெஞ்சங்கள்
வாடகை முச்சில் வாழாது
இழந்த உயிர்களோ
கணக்கில்லை
இருமிசாவதில்
சிறப்பில்லை
இன்னும் என்னடா விளையாட்டு
எதிரி நரம்பில்
தாய் தமிழிழ கொடியேற்று

puligal

புலியாகி புவிமீது
பலியாகி போன
கரும்புலி வீரர்கள்.....
புதையுண்டு போனாலும்
விதையாக முளைத்திடும்
மாவீரர் இவர்களே...
வாருங்கள்...
வணங்கிடுவோம்.....

-------------------------------------------

பெயர் குறிப்பிட முடியாத கல்லறைகளில்
தூங்கிகொண்டிருக்கும் மாவீரர்களுக்கு
எமது வீரவணக்கங்கள்...............

------------------------------------------

ஆயிரம் ஆயிரும் வேங்கைகளை,
இதற்காகவே நாம் கொடுத்தோம்..
இந்த சாவிலும், நோவிலும், தான் தளராமலே,
போரினை நாம் தொடர்ந்தோம்..
புலி வீரத்தில் கண்டது எந்த வெற்றி,
பிரபாகரன் காலத்தில் கண்ட வெற்றி......

மூன்று நூற்றாண்டுகளாகவே எங்களின்,
முற்றத்தை நாம் இழந்தோம்..
பகை மூச்சிலும், வீச்சிலும், தாய் நிலம் வாழவும்,
பேச்சிழந்தே இருந்தோம் ..
புலி வீரத்தில் கண்டது எந்த வெற்றி,
பிரபாகரன் காலத்தில் கண்ட வெற்றி..........

------------------------------------


தூங்கிடும் கூட்டமென்று எம்மை நினைத்தனர்,
வேங்கைகள் கூட்டமடா..தமிழ் வேங்கைகள் நாங்கலடா....
ஆண்டி பரம்பரை ஆக்கவோ எங்களை..
ஆண்டி பரம்பரை ஆக்கவோ எங்களை...
ஆண்ட பரம்பரை நாங்கள் ,..
ஈழம்.. ஆண்ட பரம்பரை நாங்கள்......

---------------------------------------

காற்றும் நிலமும் யாருக்கெனினும் கைகள் கட்டுவதில்லை..
நாம் போகும் திசையில் சாகும் வரையில், புலிகள் பனிவதுமில்லை....

மீண்டும் மீண்டும் புதிதாய் நாங்கள் முளைப்போம் இந்த மண்ணில்..
எங்கள் மூச்சும் இந்த காற்றில் கலந்து , மூட்டும் தீயை கண்ணில்.....

thunba deepavali....

போனசு புத்தாடை
பட்டாசு மத்தாப்பு பலகாரம்
அரைப்பவுனு தோடு அடுத்த நாள்
ஆட்டுக்கறி, கோழிக்கறி

போட்டி போட்டுக்கொண்டு
ஒளிபரப்பாகும் புதுப் படங்கள்
தின்பதையெல்லாம் சீரணிக்க
இன்னும் ரெண்டு நாள் விடுமுறை

தீபாவளியைக் கொண்டாட
எத்தனையோ காரணம் இங்கே
நரகாசுரனைக் கொன்றதாய் பொய் சொல்லி
நாடு முழுதும் பட்டாசு வெடிக்கிறோம்

ஈழத்தமிழனின் உதிரம் தோய்ந்த
நீளமான சிவப்புத் துண்டோடு..
அள்ளிக் கொடுத்து ஆயுதம் கொடுத்து
நல்லாத்தானே வச்சிருக்கோம் நரகாசுரனை

என்ன நியாயம் இருக்கு
என்ன தேவை இருக்கு
இரத்தம் காயுமுன்னே
இங்கு தீபாவளி கொண்டாட

காடிழந்து வீடிழந்து கற்பிழந்து
கம்பிவேலி தாண்ட முடியாமல்
காய்ந்து போன பச்சிளம் குழந்தையை
கண்ணீர் கோடுகளோடு கையில் ஏந்தி

“நாம் வெடிக்கும் பட்டாசு நவுத்துப் போகட்டும்
உடுத்தும் புத்தாடைகள் கிழிந்து போகட்டும்
தின்னும் பலகாரம் கசந்து போகட்டுமென”
வயிறெரிந்து சபிக்கமாட்டாளா வாழ்விழந்தவள்

அவள் ஈழத்துத் தாய் ஆகவே சபிக்கமாட்டாள்
ஆனாலும் இந்தத் தீபாவளியில்
இனிப்புகளை ஒதுக்கி புத்தாடை துறந்து
ஈழத்தை நெஞ்சில் சுமப்போம்

vuravu editor

ஈழம் நோக்கி சில கேள்விகளும் விவாதங்களும்
மனித உரிமைகளுக்கு எதிரான அமெரிக்கா ஈழத்தில் மனித உரிமை மீறல் குறித்து பேசுவது ஏன் ?
உலகில் மனித உரிமைக்கான முன் மாதிரியான நாடாக இருந்த கியூபா ஈழத்தில் ஒரு லட்சம் மக்கள் கொல்லப்படுவதற்கு ஆதரவாக செயல்படுவது ஏன் ?
ரஷ்யா, சீனா, இந்தியா தலைமையில் உலகில் ஒரு அணிச் சேர்க்கை நடைபெறுகிறதா ?
அமெரிக்கா தலைமையில் நேட்டோ நாடுகள் மட்டுமே ஐ.நா.வில் ஈழத்தின் மனித உரிமை குறித்த விவாதத்தில் பங்கெடுத்தது, ஆனால் தோல்வி அடைந்தது ஏன் ?
உலக அளவில் பொருளாதார அரசியல் நிலைமை கூர்மையாக மாறி இருக்கிறது, எனவே வர்க்க அணிச் சேர்க்கை புதிதாக உருவாகியுள்ளதா ?
முதலாளியம் உலக அளவில் பின்னடைந்து விட்டது என்று கருதலாமா ?
ஈழப் பிரச்சனை தீர்க்கப் படவேண்டும் என்பதில் சர்வதேச அளவில் யாருக்கும் அக்கறையில்லை, தங்களது நலன் என்ற அடிப்படையில் மட்டுமே செயல்பட்டது, தேச விடுதலை போராட்டத்தை பயங்கரவாதம் என்ற பெயரில் அணைத்து நாடுகளும் எதிர்த்தன. ஆக உலகில் ஒரு தனி நாட்டின் தேச விடுதலையை ஆதரிப்பதோ, தனிநாடாக அங்கீகரிப்பதோ இயலாத ஒன்றா ?
ஆசிரியர்
உறவு இதழ்

bharathidhasan kavithai

தேடி சோறு நிதம் தின்று பல
சின்னன் சிறு கதைகள் பேசி மனம் வாடி துன்பம் மிக உழன்று பிறர் வாட பல செயல்கள் செய்து நரை கூடி கிழ பருவம் எய்தி
கொடுங்கூற்றுக்கு இரையென பின் மாயும்
பல வேடிக்கை மனிதரை போலே
நானும் வீழ்வென் என்று நினைத்தயோ..?

eelam malarum

இழக்க என்ன இருக்கிறது...
உயிரை இழக்க துணிந்த கூட்டம்...
ஈழம் அதனை மீட்டெடுக்க...
தூக்கம் துறந்த புனித கூட்டம்...
மலட்டுப் பெண்ணும் கருத்தரிப்பாள்...
மாவீரனை அவள் ஈன்றெடுப்பாள்...
மண்ணை காக்கும் மறத்தமிழன்...
மானமிழந்தால் கொதித்தெழுவான்...
சகலம் துறந்த சந்ததியர்...
சமுத்திர கரையில் சிதைந்தவன் ஆணான்...
சரித்திரம் இருந்தும் தொலைந்தவன் ஆணான்...
தரித்திரம் அவர்களை துரத்த துரத்த...
போராளி என புலம்பெயர்ந்தான்...
கோழை வர்க்கம் கொக்கரிக்க...
சீறும் புலியாய் சினவெடுத்தான்...
தமிழுக்கென ஒரு தேசம் கண்டான்...
அதை ஈழம் என்றே மார்தட்டினான்...

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்!

அலை மோதும் கடல் மீது
நிலைபெறும் இப் பாருலகில்
விலை போகாத் தமிழ் மானம்
தனைக் காத்த பெருமகனாய்,
சிற்பி செதுக்காத சிலையாக - எம்
சிந்தனையை சிலிர்க்க வைக்கும்
சிரித்தமுக சிறுத்தையென
சிறந்து நிற்கும் சீராளா!
பெயரினிலே மட்டுமல்ல
பெருமையிலும் பார்த்திபன் நீ!
மனோபலத்தின் மகுடமென
மாட்சி பெற்ற மாவீரா!

உடலினை நீ மெழுகாக்கி
உயிரினையே திரியாக்கி
தியாகமெனும் தீயினிலே
உருகி நீ ஒளி கொடுத்தாய்!
கருகியது கயவர்களின் முகமூடிகள்
பெருகியது தமிழுணர்வின் பெறுமானங்கள்;
நீ கொடுத்த ஒளியினிலே
உண்மையின் உரு விளங்க,
உயிர்த்தெழுந்த தமிழுணர்வால்
ஊரெலாம் கொதித்தெழும்ப,
மக்கள் புரட்சியது
மாண்புடனே வெடித்ததடா!

அகிம்சையின் எல்லையை
ஆதவன் நீ தொட்ட பின்பும்
தமிழர் தம் வாழ்விலே
கிழக்கு வெளுக்கவில்லை!
அப்போது தான் புரிந்தது......
அஸ்தமனமானது ஆதவனல்ல
அகிம்சைதான் என்று;
முப்பது அகவைகள்
முயன்று நாம் வாதாடி,
பன்னிரு நாட்கள் - நீ
பசித்திருந்து பலியாகி,
அகிம்சையின் ஆற்றலை
ஆணிவேர்வரை அலசிப்பார்த்தபின்,
ஆய்ந்தவர்கள் ஓய்ந்துவிட்டோம்
பயனில்லை; அமைதியினால் பலனில்லை;

தமிழர் தம் தலைவிதி மாற்றிட - எம்
ஈழத்தில் கிழக்கு வெளுத்திட
உழக்கு பகையினை
உயிர்ப்பலி எடுத்து,
உறு வலி உணர்த்து!

கயவர் தம் கரங்களில் எம் தமிழ் நொறுங்க,
நீர்த் தரங்கமாய் எம்மவர் உதிரமும் பெருக,
எம் நிலத்தில்...
சிரங்கென சிங்களப் பெரும்படை பரவ,
எம்மில் சிலர்...
குரங்கெனப் பகைவர் தம் பக்கம் தாவ,
நிலை குலைந்து நம் தாய்நிலம் ஆட - அன்று
தலைவன் எழுந்தான் எம்முரிமை மீட்க!
இது தவறா...........???

அகிம்சை பிழைத்தது
ஆட்சிகள் தீங்கிழைத்தது
பாரத பூமியே - எம்
பார்த்திபனைப் பலியெடுத்தது
வலித்ததெம் நெஞ்சம் - அதனால்
புலிகளாய் ஆனோம் - ஆனால்
அடுத்தவன் வயலில் நாம்
அறுவடை செய்யவில்லை - எம் பயிரைக்
கெடுக்க வந்தவனைத்
தடுக்க நாம் போரிட்டோம்!
கொடுத்தது எம் உயிர்களை - ஆனால்
எடுத்த பெயர் "பயங்கரவாதிகள்"
இது என்ன நியாயம்.......???????

அமைதி வழி நடந்தபின் தான்
ஆயுதம் தாங்கினோம் - இன்று
ஆயுதங்களை மௌனித்தது ஏன்???
செத்துப் புதைத்து
இற்றுப்போன அகிம்சையை
சமாதியிலிருந்து கிளறியெடுக்கவா...???
இல்லை! இல்லவே இல்லை!

அகிம்சை பிழைத்தது;
ஆயுதப்போரை அகிலமே சேர்ந்து நசித்தது;
அடுத்த வழியை யோசிக்க விடுமுறை வேண்டாமா?
அதுதான் ...................

எடுத்த காரியம் யாவிலும் வெற்றி
படைத்த தலைவனின்
பாதையில் நிற்போம்
பயணத்தின் முடிவு.....
தலவன் ஆளும் தமிழீழ தேசம்!

தமிழரின் தாகம்
தமிழீழத் தாயகம்!

mumbai muthuraj

எண்ணிப்பாரடா தமிழா இணைந்து நில்லுடா தமிழா

மண்ணில் உன்னை வெல்ல யாருடா.... மரத் தமிழன் நீயடா...

உன்னைப் பிளவு படுத்தும் வீணணை வீழ்த்தடா... தமிழ்

அன்னையின் புதல்வர்கள் நாமெனச் சொல்லடா...

ஆறரைக்கோடி தமிழினமே நீ கிளர்ந்தெழுந்தால்

ஆழ் கடலும் வழி விடுமே அறியவில்லையோ?

எக்கணமும் புகழ் மணக்க இருந்தவரே.. நீவீர்

அக்கினியாய் கிளம்பாமல் அடங்கி இருப்பதேனோ?

பச்சிளம் பிஞ்சுகள் சருகாய் சாய்கிறதே

பால் மனம் மாறா பிள்ளைகள் பாடைகளில் போகிறதே

கோரத் தாண்டவமாடும் சிங்களன் வெறியாட்டத்தில்

வீர புலிக்குட்டிகள் விழுப்புண் தாங்கி மடிகிறதே!

கொதித்து எழடா தமிழா - உன் குருதி குடித்தவனை

மிதித்து வீழ்த்தடா தமிழா....

செத்து செத்து வாழ்வதை விட - தமிழீழம் மலர

வித்தாகி மடிவோம் வாடா தோழா!


தோழ்தருவோம் நம் புலிக்கூட்டம் தினவெடுக்க

வாழ் எடுப்போம் பகைவனின் கதை முடிக்க

நாள் குறிப்போம் தாயக விடியலுக்காக -

நம்பிப் போராடப் புறப்படடா என் தமிழா

tamil kavithai..

தமிழுக்கு அமுதொன்று பேர் அந்தத்
தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிர்க்கு நேர்.

இனிமைத் தமிழ்மொழி எமது - எமக்
கின்பந் தரும்படி வாய்த்தநல் அமுது!
கனியைப் பிழிந்திட்ட சாறு - எங்கள்
கதியில் உயர்ந்திட யாம்பெற்ற பேறு!
தனிமைச் சுவையுள்ள சொல்லை - எங்கள்
தமிழினும் வேறெங்கும் யாங்கண்டதில்லை!
நனியுண்டு நனியுண்டு காதல் - தமிழ்
நாட்டினர் யாவர்க்குமே தமிழ் மீதில் (இனிமைத்)

தமிழ் எங்கள் உயிர் என்ப தாலே - வெல்லுந்
தரமுண்டு தமிழருக்கிப்புவி மேலே
தமிழ்என்னில் எம்முயிர்ப் பொருளாம் - இன்பத்
தமிழ்குன்றுமேல் தமிழ்நாடெங்கும் இருளாம்
தமிழுண்டு தமிழ் மக்க ளுண்டு - இன்பத்
தமிழுக்கு நாளும் செய்வோம் நல்ல தொண்டு
தமிழ் என்று தோள் தட்டி ஆடு! நல்ல
தமிழ் வெல்க வெல்க என்றே தினம் பாடு!

deepavali scare..

பக்கத்து வீட்டு தீபாவளி வெடிசத்தம் என் ஈழத்து சொந்தங்கள் மீது வீசபட்ட கிளஸ்டர்,பாஸ்பரஸ் குண்டுகளை நினைவுபடுத்தின.. 

makkal TV eelam song

வெடி விழுந்து எரிந்த பனை!
கரை உடைந்து காய்ந்த குளம்!
கூரை சரிந்த எமது இல்லம்!
குருதி படிந்த சிறு முற்றம்!
இருட்டை கிழிக்கும் தாயின் கதறல்!
இரத்தம் வழிந்த குழந்தை சடலம்!
கணவன் இழந்த எனது தங்கை!
ஆதரவு இன்றி திரியும் தோழன்!
சாலை எங்கும் பின குவியல்!
பாம்பு கடிக்கு பலிபோகும் மக்கள்!
பட்டினியில் சாகும் பாரதி இனம்!
பூச்சி கடிகுள் உறங்கும் பிள்ளை!
இறப்பதர்க்காக பிறக்கும் குழந்தை!
கட்டாய கருக்கலையபடும் கர்பிணி!
மௌனம் சாதிக்கும் சொந்த இரத்தம்!
காணமல் போகும் இளைஞர் கூட்டம்!
நடுரோட்டில் கற்பழிக்கப்படும் பெண்கள்!
உணவுதீர்ந்தும் வரிசையில் நின்ற சிறுமி!
தேச பதுங்குகுழியின் உள்ளே பதுங்கும் எம்சொந்தம்!
வேடிக்கைபார்க்கும் சமயமொழி ஒற்றுமைகொண்ட உறவு!
என் தோப்பினில் அடைந்த பூங்குரிவி எங்கு போனதோ!
என் தோட்டத்தில் ஈன்ற தாய் பசுவும் என்ன ஆனதோ!
விலகேத்திய மாடம்மெல்லாம் விழுந்தே போனதே!
ஊஞ்சள்ளாடிய அரும்பு இல்லை!
நீந்தி பழகிய கிணறு இல்லை!
முற்றம் தெளித்திட விடியல் வருமோ?
எந்த சாமத்தில் வாழ்வு முடியுமோ?
பூமி தாயே..என்ன பிழை செய்தார்கலடி தாயே..??

annai sonia !!!

மக்களைக் கொன்ற மகராசி (சோனியா)

கருவறைக் குள்ளும்
ஆயுதம் இறக்கி
கருவறுக்கும்…
குரூரத்தின் அடையாளமே!
ஒரு,
பெண்ணுக்குள்ளே
இத்தனை வன்மையா…
என்றென்னும் அவமானமே!!

இந்திய பெண்னென்றால்
இளகும் மனசு.
இத்தாலிய பெண்னுனக்கு
இறுகிய மனசு.

பிள்ளைகளை கொன்ற
முரண் “அன்னை” நீ!

எங்கள் குழந்தைகளுக்கு
ஒப்பாரி பாடவைத்த
ஒப்பற்ற “தாய்” நீ!

குழந்தை இரத்தத்தை
பாலாடையில் நிரப்பிய
பாச “அம்மா” நீ!

ஈழ மக்களின் வாழ்வை
இருட்டாக்கிய…
இந்திய இறக்கு “மதி” யே!

தூளிகளுக்கு பதில்
பாடைக் கட்டிய
புண்ணிய”வதி” யே!!

எங்கள் காந்தி
ஏந்தியது அகிம்சையை!
இத்தாலிய காந்தி நீ
ஏந்துவது ஆயுதத்தை!!

மக்களை கொன்ற மகராசியே,
உன்…
கொடூரத்தின்
கொள்ளளவு என்ன?
கொல்லளவு என்ன?

சேகுவேரா

உலகின் எங்கோ
ஒரு மூலையில்
நடக்கும் அநியாயத்தைக்
கண்டு உங்கள்
மனம் கொதித்தால்
நாம் இருவரும் தோழர்களே...... -சேகுவேரா

annan prabhakaran

பயம் என்பது பலவீனத்தின் வெளிப்பாடு. கோழைத்தனத்தின் தோழன். உறுதியின் எதிரி. மனித பயங்களுக்கெல்லாம் மூலமானது மரண பயம். இந்த மரணபயத்தைக் கொன்று விடுபவன்தான் தன்னை வென்று விடுகிறான். அவன் தான் தனது மனச்சிறையிலிருந்து விடுதலை பெறுகிறான்-- தலைவர் மேதகு பிரபாகரன்..

subramaniyan kuwait

எதை மறந்தோம்:
தமிழா தமிழா,கேட்டுப்பார் – இன
மானம் எங்கே உன் மனதிடம் கேட்பார்!

வானம் பார்த்த பூமியிலே -நம்
மானம் வாழ்ந்த பூமி ஈழமடா!

பெற்றமடி வெடிகுண்டு, பிறந்த இடம் சுடுகாடு.
பள்ளிகளோ பதுங்குகுழி, சுவாசமோ முடை நாற்றம்.
பசி..என்று எழுந்து நின்றால், நானும் கூட கரிகட்டை!

உள்ளங்கை ரேகை அழிந்த பின்னே -ஆயுல் ரேகை
ஜோசியமா…..? -நீ யார்
என்று சரித்திரம் கேட்ட்கையிலே
நானும் தமிழன் என்ற கைநாட்டா……?

நம் பொதுமறை என்ன மறை பொருளா- இத்தாலி
நமக்கு இறையாண்மை கற்பிக்க!

அடி பட்ட ரணங்களின் கதரல்களோ- நாம்
திரும்பி பார்க்க ஏங்குதடா!
இன உணர்வுகள் இல்லா மனிதனுக்கு பசிக்கான
உணவும் குப்பையடா!

இந்தியன் என்பதோடு நின்று விட்டோம், தமிழனையே
கொன்றுவிட்டோம்!

பணம் துப்பிய இடத்தில் வாக்குகள் குத்தினால்-ஓர்நாள்
தப்பிய இனத்தின் அகதியாய் அறிய படுவாய்!

நம் மீதும் எழுதப்படும் வரலாறு யுத்த வரலாறு அல்ல,
ஒரு இனமே செத்த வரலாறு!.-அதன்
குறிப்புககளில் சொல்ல படலாம் -நாம்
எதை மறந்தோம் என்று!

என் மானமே………ஈழமே……அறுந்து விழ்ந்தது
சதைகள் அல்ல, விதைகள்……….!

thalaivan irukkiraan

காற்றே மூர்ச்சையாகும் கனத்த சொற்களை வீசாதீர்!
வீரத்தையும் விவேகத்தையும்
கொண்டவன் - அவற்றை
எப்போதும் சுகமாகத் தாங்கியவன்
தேசியத்தலைவன்
என்றே சொல்லுங்கள்

வாழ்வின்
இரண்டாம் பாகத்தில்
சோகத்துள் சோகமில்லாதவன்
தலைவன்
என்றே சொல்லுங்கள்

எப்போதும் தலைவனின்
தோற்றத்தையே எழுதுங்கள்
வெற்றியையும் தோல்வியையும்
கண்டவன்
இவனே என்று சொல்லுங்கள்

தலைவனை
நேசிக்கத் தெரிந்தவர்கள்
நீங்களென்றால்
வேறெதையும்
யோசிக்கத் தேவையில்லை
என்றே சொல்லுங்கள்

காற்றில்லாக் கிரகத்திலும்
வாழத்தெரிந்தவன் தலைவன்
தமிழன் கைகளில்
விலங்குகள் பூட்டி
கால்களுக்கு ஆணியடித்த
சிங்களத்தின்
பொய்ப் புழுகுகளை
அவசரமாகச் சுட்டெரிக்க
அக்கினியாக வருவான் தலைவன்
என்றே சொல்லுங்கள்

கழுத்துவரை
புதைக்கப்பட்ட இனமாகத்
தமிழினம் இருந்தாலும்
ஒரே ராகம் பாடும் இனம்
என்றே சொல்லுங்கள்

மருத்துவ மனைகளெல்லாம்
மரணராகம் பாடியபோதும்
வயிற்றுப் பசிக்கு
உணவே இல்லாத போதும்
இனத்தை நேசித்து
இனத்தோடு நின்றவன் தலைவன்
என்றே சொல்லுங்கள்

உலக மக்களால்
உரமிட்டு வளர்க்கப்பட்டவர்கள்
சுற்றி நின்றே உதைத்தபோதும்
தனியொருவனாக நின்றே
சமராடியவன் தலைவன்
என்றே தலைநிமிர்ந்து சொல்லுங்கள்

எக்காளம் வேண்டாம்
கடவுளோடு தலைவன் இல்லை
கடவுள் தலைவனோடு இருக்கிறான்
சூரியனைத் தொலைத்து விட்டு
இருளுக்குள் தேடுபவர்களே
காற்றே மூர்ச்சையாகும்
கனத்த சொற்களை வீசுபவர்களே
இறப்பே இல்லாதவன் தலைவன்
என்றே சொல்லுங்கள்
.............................
.........................
தமிழ்த்தாய் பெற்றெடுத்த பிள்ளையே
தமிழ் மக்களுக்காக வந்துதித்த கடவுளே
வழிகாட்டி எமையிணைத்த அண்ணனே
ஈழத்தை உயிராய் நினைத்த எம்தலைவனே

ஈழம் மலருமுன் உன்னுயிர் போகுமா?
சுதந்திரக்காற்றை சுவாசிக்காது போவாயா?
மக்கள்துயர் துடைக்காது விட்டுப்பிரிவாயா?
தீர்வு காணாமல் ஈழப்போர்தான் முடியுமா?

கடவுளுக்கு வயதுண்டா?
கடவுளுக்கு அழிவுண்டா?
கடவுளுக்கு எமனுண்டா?
எம்கடவுள் உனக்கு சாவுண்டா?

மிருகவம்சப்பேய்கள் கத்துகின்றன!
சாத்தானின் வாரிசுகள் ஆடகின்றன!
உனையழித்து வென்றதென துள்ளுகின்றன!
வரவிருக்கும் இழப்பைப்புரியாமல் கொண்டாடுகின்றன!

நீ இருக்கிறாய் என்பதுதான் உண்மை
உனையாறவிட்டு எழுவதே மக்களின் கடமை
எதிர்காலத்தில் அழியும் எம்மவரின் வறுமை
மறவோம் ஒன்றே எமது தலைமை

"போராட்ட வடிவங்கள் மாறலாம் எனினும் இலட்சியம் மாறாது�
என்ற உன் சிந்தனையை நாம் மறக்கவில்லை!
எம்மிடம் தந்த இப்பணியை நாம் மறுக்கவில்லை!
களத்தில் ஓய்வெடுக்க புலத்தில் நாம் எழுகிறோம்!
உம்முடன் சேர்ந்து உம்பணியில் இணைகிறோம்!

எதிரியின் வாயை அடக்க
அயல் நாட்டின் வாயைப் பிழக்க
தமிழரின் குரல் ஓங்கி ஒலிக்க
உன்பேச்சை எதிர்பார்த்து நிற்கின்றோம்!
ஆறதலைக்கேட்க உன்மக்கள் காத்திருப்போம்!!!ஆம் தமிழீழம் தெரிகிறது...!
பார்வையின் வேகம்
படைத்தவன் கண்ணிற்கு....
புரியாவிட்டாலும்.
எம்மை வாழவைப்பவன்
கண்ணிற்கு புரிகிறது.

அடர்ந்த காட்டில்
அதிசய மனிதன்.
தாய் மண்ணை மீட்க.....
தனி இராஜ்சியம் அமைக்க.....
தன்னைத் தயார் படுத்துகின்றான்.

அயல் நாட்டு மூளை
இவனுக்குத் தேவையில்லை.
உடம்பெல்லாம் மூளை
இவனுக்கு உதயமாகியுள்ளது.

யார் யாரோ படைத்த.....
போர்க்கருவிகளை
தன் வல்லமையால்
வெடிக்கவும் வைப்பான்.
செயல் இழக்கவும் வைப்பான்.

இவனின் பாதச் சுவடுகளில் - இன்று
எந்தனையோ ஒளிச்சுடர்கள்.
ஆணிவேராய்.......அத்திவாரமாய்......
எம் நாட்டிற்கே பெருமையல்லவா.....?

அகவை அடுத்தடுத்துத் தாண்டினாலும்.
இவனின் இலட்சியக் கனவுகள்.....
இன்று நனவாகி....... நாலாபக்கமும்.
ஒளி விட்டுப் பிரகாசித்து வருகின்றது.
ஆம் தமிழீழம் தெரிகின்றது.......!!!இனவெறி இருட்டுக்குள்
பக்கத்தில் இருந்தவனே ...
படுகுழி வெட்டினான் .
பகைவரோடு சேர்ந்து ....!
தேசம் விட்டுத் துரத்தி
தேசத்துரோகியாய்
இனங்காட்டியவனும் அவனே ...!

இப்படியொரு தலைவன்
இனியில்லை என்னும்படி
எம் தமிழினத்துக்காய்....
வாழ்ந்து வழிகாட்டியவனும்
அவனே ......!

முப்பதுவருடகாலம்
முடிகொண்டவனும் ...
அவனே..... !
முற்போக்குச் சிந்தனையாளனும்
அவனே ...!
முடிவில் நடப்பதை
அறியமாட்டானா ....?

பூகம்பத்தில் புதைந்துபோக
அவனென்ன ....
பூக்கம்பமா..?.
தப்பித்து ஓட....
அவனென்ன ...
தரங்கெட்ட சிங்களமா ...?

நிறங்கெட்ட எம் வாழ்வை
நினைத்து நினைத்து
வருந்தியவன் ....
நிர்க்கதியானான் என்பது
தவறு ...!
உன்னையொரு தமிழனாய்
உலகுக்குக் கட்டினானே ...!
இது போதாதா ?...சொல் !

என்ன நடக்கிறது ..?
ஈழத்தில் ....!
ஓடும் நதிகளில்
ஈழகீதம் ..இன்னும்
இசைக்கிறதாம்....!
எதிரிகளே ...!நிறுத்துங்கள் ...
இனவெறியைத் திணிக்காதீர்கள் ...!
இரத்த வாடை வேண்டாம் ...!
எமக்கொரு தலைவன்
எப்போதும் உள்ளான் ...

true tamilan anand

இந்திய பேரரசின் கீழ் அடிமையாக இருக்கும் மற்றும் ஒரு கையாலாகாத தமிழன்...............

"Freedom is never voluntarily given by the oppressor; it must be demanded by the oppressed" - Martin Luther King Jr.


என்னை பற்றி எழுதும் அளவுக்கு இன்னும் எழுத்தாசிரியர் பிறக்கவில்லை, எழுதப்படும் அளவுக்கு நான் இன்னும் சாதிக்கவில்லை. காத்திருக்கிறேன் சாதனை செய்ய!!!

என் வாழ்கை, என் எண்ணம், என் பேச்சு, என் எழுத்து, என் மூச்சு அனைத்துமே எம் தமிழ் இன மக்களை நோக்கி தான்..
நான் இருக்கும் இடத்தில் இருந்தே ஏதோ ஒருவகையில் போராடி கொண்டே தான் இருக்கிறேன் என் இனத்துக்காக..
என்னை சுற்றிய கட்டமைப்புகளை உடைக்க முற்பட்டு தோற்றாலும் மீண்டும் உடைக்க முற்பட்டுகொண்டே இருக்கிறேன்...
விடியலை நோக்கிய என் பயணம் தொடர்ந்து கொண்டே தான் இருக்கும் என் வாழ்நாள் முழுவதும்...

இந்த பறந்துட்ட இவ்வுலகில் எல்லோரையும் நேசிக்கிறேன் என் எதிரி உட்பட..

தமிழ் மக்களின் அடிமனதில் கிளர்ந்தெழும் தகிப்பாகத்தான் என் குரல் ஒலிக்கிறது. மொத்தத்தில், தன்மானத்தை விட்டுவிட்டு இந்தியப் பேரரசுக்குக் கப்பம் கட்டும் அடிமைத்தனத்தின் எடுத்துக்காட்டாக விளங்கும் தெம்பற்ற குறுநில அரசாகத்தான் தமிழகம் இருக்கிறது. இதைச் சொல்வதற்காக என்னைக் கைது செய்வார்களேயானால், இப்போதே சிறைக்குப் போகத் தயாராக இருக்கிறேன்.

anand,Babylon International, Raipur, C G 

real tamilan from madurai

ஊரெல்லாம் கோலாகலம் உற்சாகம் ,அங்கே முள்வேலி சிறையில் நம் தமிழ் சகோதரர்கள் ,பசியோடு பச்சிளம் குழந்தைகள் ,இங்கே பாலோடும் நெய்யோடும் புளித்த ஏப்பமிடுவோர்.வானத்தில் பூக்குது பட்டாசு ஈழ தமிழர் மனம் பூக்கலையே ,இரண்டு லட்சம் தமிழ் பூகளை கருக விட்டு விட்டோம் .
இரண்டு ஆண்டுகளாய் எனக்கு இல்லை தீபாவளி
ஈழ தமிழன் சிரிக்கும் நாளே இனிய தீபாவளி
இரவி
மதுரை

tamil nadu mp's srilanka visits

தமிழநாட்டில் 100 ரூபாய்க்கும், 200 ரூபாய்க்கும் ஓட்டை விலைகொடுத்து வாங்கி MP ஆனவர்கள், ராஜபக்சேவிடம் 100 கோடிக்கும் 200 கோடிக்கும் விலை போகவார்களா?
மனதில் பட்ட விடைகள்...

1. இங்கு கொடுத்ததை எங்காவது வாங்கி கணக்கை சரி வேண்டியதுதானே..
2.விருந்துக்கும் பெயர் போனவன் ராஜபக்சே என்பதை நாம் மறந்து விடக்கூடாது..
3.அட போங்கடா.., தமிழனை ஏமாற்ற எத்தனை நாடகங்கள்தான் போடுகிறார்கள்..

தமிழக கருணாவின் கைதடிகள்,ஸ்ரீலங்கா கருணாவை சந்திப்பார்களா?
மனதில் பட்ட விடை...

பிறகு சந்திக்காமல் வருவார்களா? இருவரும் ஓர் இனம் ஆயிற்றே...

deepavali kondattam

முள்வேலிக்குள்
முக்கி தவிக்கும்
சொந்தங்களின் குரல்

உண்ண ,உடுக்க
வரிசையில் நிற்கும்
கூட்டம்

நிர்வாணமாக்கி
கையிரண்டை கட்டி
பின்தலையில்
துப்பாக்கியில்
சுட்டு தள்ளும் படம்
திரும்ப திரும்ப வர

என்னடா தீபாவளி
வேட்டை கொண்டுபோய்
முதல்வர்
நாற்காலிக்கு வை

Saturday, August 1, 2009

prabhakaran





thileepan,susai





real tamilan velupillai prabhakaran



perfect leader prabhakaran



real hero prabhakaran







viduthalai puligal,prabhakaran







great pranhakaran





tamil thesia thalaivar prabhakaran